Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Sunday, March 21, 2010

2011 ஐ.பி.எல் தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகள்

2010 ஐ.பி.எல். இருபதுக்கு இருபது போட்டி விறு விருப்பாக நடந்து வருகின்றது. இதில் ஓரிரு அணிகளை தவிர ஏனைய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்காக வெகுவாக மோதிக்கொண்டிருக்கின்றன. இதில் கடந்த கால செம்பியன்கள் இம்முறை முதல் சுற்றிலேயே வெளியேறும் தருவாயில் மோதிக்கொண்டிருகின்றன. இருப்பினும் எஞ்சிருக்கும் போட்டிகள் தான் தீர்மானிக்கவிருக்கின்றன.

ஐ.பி.எல். இருபதுக்கு இருபது போட்டிகளில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதாவது சென்னை, மும்பை, டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளாகும். இந்நிலையில் அடுத்த ஆண்டு (2011) நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த வரிசையில் புனே மற்றும் கொச்சி ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

புனே,அகமதாபாத், கான்பூர், நாக்பூர், இந்தூர், கட்டாக், குவாலியர், விசாகப்பட்டிணம், கொச்சி ஆகியவற்றில் ஏதேனும் இரு நகரங்களை அடிப்படையாக கொண்டு புதிய அணிகள் தெரிவு செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது..

இதில் புனே அணியை சகாரா குரூப் (Sahara Adventure Sports Group ) $370 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்தும், கொச்சி அணியை ரெண்டர்ஸ் வோஸ் ஸ்போட்ஸ் லிமிட்டட் நிறுவனம் ( Rendezvous Sports Ltd ) $333.33 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்தும் அணிகளை தனதாக்கி கொண்டுள்ளன.

1 comment:

  1. Cricket Match enda ungaluku sollava venum?? IPL vera...post illana nallava irukum Sir? Good post..

    ReplyDelete

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits