Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Saturday, May 15, 2010

ஜெயசூரியாவின் ஆ(ட்ட)டுகளம்

இலங்கையின் முன்னணி சகலதுறை வீரர் நம்ம ஜெயசூரிய. இவரது ஆட்டத்துக்கு ஆப்பு விழும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 40 வயதாகும் ஜெயசூரிய அண்மைய காலமாக விளையாட்டில் சோபிக்க தவறுகின்றமை இவரது கிரிக்கெட் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவுக்கு வந்திருக்கிறது. 1989 - 90 காலப்பகுதியில் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சனத் 1996 - 97 காலப்பகுதியில் கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகபடியான விருப்பு வாக்குகளை பெற்றுகொண்டவர் அண்மையில் நடந்து முடிந்த IPL மற்றும் ICC T20 உள்ளிட்ட இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இழக்க அல்லது டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை சுட்டிகாட்ட தக்கது. மறுமுனையில் இளம் வீரர்கள் ஒரு கலக்கு கலக்கி வரும் நிலையில் இவரது பொறுப்பற்ற ஆட்டம் அனைவரினதும் எதிர்ப்பு கணைகள் விழ காரணமாக அமைந்திருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பின்னரும் மக்களின் விருப்பத்திற்காக தொடர்ந்து விளையாட போவதாக அறிவித்திருக்கிறார் சனத். இதற்கிடையில் இலங்கை கிரிக்கெட்டின் வளமான எதிர்காலத்திற்காக இவரை தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமென இலங்கையின் தலைமையும் எதிர்கால தலைமையும் பல அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவரது சிறந்த ஆட்டம் வெளிபடாமையினாலும் இளம் வீரர்களுக்கு களம் அமைத்து கொடுக்க முடியாமையினாலும் அணியின் தற்போதைய தலைவர் பல்வேறு எதிர்ப்புகளை வெளிகாட்டி வரும் நிலையில் சனத்திடம் எதுவித மாற்றமும் இல்லை எனலாம். இந்நிலையில் சங்ககார தெரிவித்திருக்கும்  விடயமானது சனத்தின் நிலைப்பாடு தொடருமானால் தான் தலைமை பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்திருக்கின்றார். இதற்கு இளம் வீரர்கள், முக்கிய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆதரவாளர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது.

சனத் ஐயா தயவு பண்ணி "மக்களின் சேவையே மகேசனின் சேவையாக" கருதி உச்சத்தில் இருக்கும் போதே ஒதுங்கிகொள்ளுங்கோ. உங்களது சேவை இலங்கை அணிக்கு தேவை. அதை வெளியிலிருந்து முடிந்தளவு பண்ணுங்க. இன்னும் 10 ஜெயசூரிய உங்களால் உருவானால் எமக்கு சந்தோசமே. இலங்கை கிரிக்கெட்டின் வளமான எதிர்காலம் உங்கள் கைகளில்....... 

4 comments:

  1. Ean avar politician agi edhum panna mattara? neega match paithiyama irukalam..adhuku eppadiya???

    ReplyDelete
  2. கேட்பாருன்னு நினைப்பீங்க?

    பாவம் சங்கா.. & இலங்கை அணி & ரசிகர்கள்..

    இதற்குள் நேற்றும் நம்ம சனத் ஐய்யா அவர்கள் ஒரு பேட்டியில் "2011 உலகக் கிண்ணம் வரை நான் விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" என்று அரிய கருத்து உதிர்த்துள்ளார்..
    அவர் ஒரு வேளை தனக்கு வாக்குப் போட்ட மாத்தறை மக்களை சொன்னாரோ
    LOSHAN
    http://arvloshan.com/

    ReplyDelete
  3. இலங்கை தமிழர்கள் சத்தியமாக திருந்த மாட்டார்கள்........

    ReplyDelete
  4. Master ku munnati ethulayume ivaru pinnadi thangooo

    ReplyDelete

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits