Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Saturday, September 25, 2010

இதாங்க எந்திரன் படம் (வீடியோ காட்சிகள்)

இந்திய திரைப்பட வரலாற்றில் ஹாலிவுட் விட்ப்பனர்களை தமிழ் சினிமாவுக்கு திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஒரு படம் என்றால் அது எந்திரன் தான்.ஹாலிவுட் சினிமாகாரர்களே நினைக்காத ஒன்றை தசாவதாரம் படம் காட்டியிருந்தது. அதனையும் தாண்டி மெகா பட்ஜெட்டில் (150 முதல் 175 கோடி) வெளிவரும் படம் எந்திரன். சங்கர் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. இவரது இலாபம் ஈட்டும் உத்தி எவருக்கும் தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம்.

அதிலும் இந்த படத்தின் கூட்டணியை பாருங்கள். நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய், பாடல்கள் வைரமுத்து மற்றும் இசை ஆஸ்கார் நாயகன் AR ரகுமான். இது தான் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டுவதற்கு காரணம்.

சரி இந்த படம் எப்படி இருக்கும். திரையரங்குக்கு போவதென்றால் இப்போ முடியாத காரியம். ஒரு மாதத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீந்திருக்கும். படம் பற்றிய ஒரு முன்னோட்டத்தை பாருங்களேன்.


அடுத்து பாடல்கள் பற்றி சொல்ல தேவையில்லை. அத்தனையும் சக்கை போடு போடுகின்றன. குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து வித்தியாசமான உத்திகளை இந்த என்திரனிலும் புகுத்தியிருக்கிறார் நம்ம AR ரகுமான். அதில் இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ.... என்ன பாட்டுய்யா....?? கலக்கிட்டாருல்ல. அதில் வரும் அத்தனை வரிகளும் ஒரு இந்திரனின் காதலை உணர்த்துகின்றது. காலங்கள் கானா காதல்.... கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு.... என் நீலப் பல்லாலே (Blue Tooth) உன்னோடு சிரிப்பேன்.... அந்த பாடலினுடைய வீடியோ காட்சியின் சிறு பகுதி பாருங்களேன்.


காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை... நியூட்டன் ஏலேக்ட்ரோன் உன் நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை.....என்னங்க இது அடுத்த பாடல். இந்த பாடலில் அழகு தேவதையை மேலும் அழகு படுத்தி காட்டியிருக்கிறார்கள். ரஜினியோ நம்ம சூர்யா மாதிரி கடற்கரையில ஆடுறாருங்க.. பாருங்களேன் இதையும்...


தமிழில் வரும் ஒரு ஹாலிவுட் ஆஸ்கார் படமென்று இந்திரனை குறிப்பிட்டால் மிகையாகாது. அந்தளவுக்கு தொழினுட்பம் புகுந்து விளையாடியிருக்கிறது. காட்சி அமைப்புகளும் சரி, அதற்கான பின்னணி இசையும் சரி பிரமிக்க வைக்கின்றது.

பாடல் வரிகள் அனைத்து இயந்திர மனிதனை உருக்கி வடித்திருக்கிறது. குறிப்பாக புத்துய மனிதா.. என்று தொடங்கும் பாடல் மனிதனை எலாம் அறிவை தட்டி எழுப்பியிருக்கிறது..

எந்திரன் நிச்சயம் தமிழ் சினிமாவில் தடம் பாதிக்கும்.

Monday, September 13, 2010

சூரியன் பண்பலையின் என்றென்றும் புன்னகை

உலக தமிழ் வானொலி வரலாற்றில் புதுமையை புகுத்தி தனக்கென ஒரு இடத்தை இன்றும் நிலை நிறுத்தி நிமிர்ந்த நடையில் பன்னிரண்டு வருடங்களை கடந்திருக்கும் ஒரு இலங்கையின் வானொலி தான் சூரியன் பண்பலை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வெற்றிநடை போடும் சூரியன் நேயர்களிடையே பல புதுமைகளை புகுத்தி அவர்களின் மனங்களை வென்று வருகின்றது. காலத்திற்கேற்றால் போல் தனது நிகழ்ச்சிகளை மாற்றி பல புதுமைகளை செய்து காட்டியிருக்கிறது. அந்தவகையில் தனது நேயர்களை மகிழ்வித்து வரும் வானொலியான சூரியன் பண்பலையானது தனது தரமான நிகழ்ச்சிகளால் ஏனைய வானொலிகளிடமிருந்து முன்னிக்கின்றது என்றால் மிகையல்ல. அதேபோல தனது நேயர்களின் இசைவாக்கத்திற்கு அமைவாக அவர்களின் விமர்சனங்களை உள்வாங்கி நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.

இருபத்துநான்கு மணிநேரமும் ஒலிபரப்பாகி வரும் சூரியன் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு இடையில் வெவ்வேறுப்பட்ட நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்களால் தொகுத்தளிக்கப்படுகின்றன. சூரியனின் வெற்றிக்கு தரமான நிகழ்ச்சிகளோடு அதன் அறிவிப்பாளர்களின் சுவாரஸ்யமான உரையாடல்களுமே காரணமாகும்.

அந்தவகையில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிமுதல் இரவு 8.45 மணிவரை என்றென்றும் புன்னகை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அனைவரையும் கவர்ந்திழுத்த இவ்நிகழ்ச்சியானது சூரியன் பண்பலையின் முகாமையாளர் நவநீதன் மற்றும் அறிவிப்பாளர் சஹானா ஆகியோரால் தொகுத்து வழங்கப்படுகிறது.


ஆரம்பத்தில் நேயர்களை கவர்ந்திழுத்த இந்நிகழ்ச்சி தற்பொழுது அரு (றுக்கும்) வருக்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. ஒரு அனுபவமுள்ள அறிவிப்பாளரின் நிகழ்ச்சி இவ்வாறு இருப்பது கவலைக்குரிய விடயமே.

காரணம் ஒரு நேயர் தொலைபேசியினூடாக அழைப்பினை மேற்கொள்ளும் போது, அவரை அழைப்பிலே காத்திருக்க செய்துவிட்டு அறிவிப்பாளர்கள் வாக்குவாதம் பிடித்துகொள்வதும், நேயரை கட்டாயபடுத்தி பாடவைப்பது மற்றும் விளம்பரங்களை பாடி கேட்பவர்களை அருவருக்க செய்து விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் நேயர்கள் அறிவிப்பாளர்கள் சொல்வதை செய்ய முடியாமல் திணருவதுமுண்டு. அவர்களை கட்டாயப்படுத்தி ஒரு விடயத்தை செய்ய வைப்பதென்பது முறையல்ல.

ஆரம்பத்தில் இசைசமர் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நேயர்களிடையே பிரபல்யப்பட்ட நவநீதன் இப்பொழுது இவ்வாறான நிகழ்ச்சிகளை வழங்குவது சூரியனின் தரத்தை குறைக்கக்கூடியதாகும். நேயர்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டியது அறிவிப்பாளர்களின் கடமை தான். என்றாலும் அதை பொருட்படுத்தவில்லை என்றால் நேயர்கள் ஏனைய வானொலிகளை கேட்க தொடங்கிவிடுவார்கள்.

எனவே இதை ஒரு விமர்சனமாக கொண்டு தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். இவ்வாறான விமர்சங்கள் அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியே தவிர குறையல்லவே. மேலும் பல மெருகூட்டல்களோடு தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கும் ஒரு நேயன்.....

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits