Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Wednesday, October 27, 2010

இளைஞர்களின் வாழ்க்கை - தொழிற்கல்வி

எம்மில் பலர் (இளைஞர்கள்) பாடசாலை கல்வி பெறுபேறுகள் தோல்வியடைந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணுவதுண்டு. ஒரு சாரார் விரக்தியடைவர். ஆனால் அதற்க்கு ஈடாக பல எமது வாழ்வின் ஏணிப்படியாக தொழிற்கல்வி இருப்பதை உணர்வதில்லை. அது தொடர்பாக தேடி அறிந்துகொள்வதிலும் நாட்டம் கொள்வதில்லை.

இன்றைய நிலையில் எமது நாட்டிலும் சரி, உலகிலும் சரி வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில் வேலை வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள சிறந்ததொரு வழிமுறை தொழிற்கல்வி என்றால் மிகையாகாது.

இலங்கையில் இன்று பல தொழிற்கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் சிறப்பம்சம் யாதெனில் "இலங்கையும் - இலவசமும்" என்றொரு தலைப்பை வைக்ககூடிய அளவிற்கு இலவசமாகவும் தொழிற்கல்வி நிலையங்கள் இயங்குகின்றன. உலக நாடுகளில், குறிப்பாக தெற்காசியாவை பொறுத்தவரையில் எந்தவொரு துறையென்றாலும் சரி இலவசங்கள் குறைவு. ஆனால் அங்கு போட்டித்தன்மை அதிகம். பணம் செலுத்திஎனும் தமது தொழிற்கல்வியை பயின்று முன்னேறுவார்கள்.

ஆனால் எமது நாட்டில் இலவசமாக பல துறைகளிலும் தொழிற் பயிற்சிகள் இருந்தும்கூட அதனை எவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்வதில்லை. குறிப்பாக எமது சமூகமான மலையகத்தில் முழுமையாக இல்லை என்பது கவலைக்குரிய விடயமே.

எமது சமூகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளில் பெரும்பாலானோர் தமது பாடசாலை கல்வி முடிந்ததும் ஏனைய அனைத்துக்கும் "குட் பாய்" சொல்லிவிட்டு வெளியிடங்களுக்கு தாவி விடுகின்றனர். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்மிய பகுதுகளுக்கு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இது ஒரு மரபுவழியாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.


இதற்காக அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ குறை கூறுவதில் நியாயமில்லை.அவர்கள் வழிகாட்டிகள்.  நாம் தான் அதற்கான வழிமுறைகளை தேடி பயன்பெறவேண்டும். இருப்பினும் இதற்கான பூரண தெளிவு சமூக மட்டத்தில் ஏற்படவேண்டும்.தொழிற் வழிகாட்டல்கள் இன்று பலதரப்பட்ட ஊடகங்களின் வாயிலாக எடுத்து செல்லப்பட்டாலும் சமூகம் அக்கறை செலுத்த வேண்டும்.

பாடசாலை கல்வி முடிந்தவுடன் எதையாவது ஒரு தொழிலை செய்வதை விட அதையும் தாண்டி இந்த தொழிற்கல்வியை பயின்று எமக்கான ஒரு அடையாளத்தை தேடுவது சால சிறந்ததே.

எனவே சமூக விருத்தியோடு எதிர்காலத்திலாவது எமது இளைஞர், யுவதிகள் தொழிற் கல்வியால் தமக்கொரு அடையாளத்தை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Monday, October 18, 2010

வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம்

ஐக்கிய நாடுகள் சர்வதேச நிறுவனமும், யுனெஸ்கோ கல்வி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் திகதியை உலக புத்தக தினமாக பிரகடனம் செய்துள்ளன. அதேபோல இலங்கை அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் வாசிப்பு வாரம், வாசிப்பு மதம் என அறிவிக்க தவறுவதில்லை. காரணம் எமது நாட்டின் எழுத்தறிவு வீதத்தினை தொடர்ந்து தக்க வைப்பதும், மக்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பதுமேயாகும்.

இந்த வாசிப்பு பழக்கமானது ஒருவருடைய பல்துறைசார் அறிவினை மேம்படுத்த உதவுகின்றது. வாசிப்பு கலாசாரம் என்பது ஒரு சாராரை மட்டும் சார்ந்தது அல்ல. இது சிறியோர் முதல் பெரியோர் வரை, அரிச்சுவடி படிப்போர் முதல் மேதைகள் வரை அனைவரிடமும் குடிகொண்ட விடயமாகும். இருப்பினும் இன்றைய நிலையில் அது குறைவடைந்து செல்வது குறித்து பல்வேறுபட்ட அமைப்புகள் அறிவுறுத்திக்கொண்டே வருகின்றன.

இருப்பினும் இலங்கையை பொருத்தமட்டில் இக்கலாசாரமானது ஏனைய பிரதேசங்களை விட மலையகத்தில் காணாமல் போய்கொண்டிருக்கிறது. பொதுவாக சின்னத்திரை, பெரியத்திரைகளின் ஆக்கிரமிப்புகள் இந்த வாசிப்பு கலாசாரத்தை விரட்டியடிக்கிறது எனலாம்.

வீதிக்கு பத்து வீடியோ காட்சிகள் விற்ப்பனை கூடங்கள் இருக்கின்றன. இருப்பினும் ஒரு புத்தக கடையை தேடினால் இருப்பது அரிதே. இந்த திரைப்படங்களை விற்கும் கடைகளில் கூடும் கூட்டம் புத்தக கடைகளில் இருப்பதில்லை. குறிப்பாக மலையக வீடுகளில் திரைப்பட தட்டுக்கள் (DVD, CD) வைக்க இடமிருக்காது. ஆனால் புத்தகங்கள் பற்றி சொல்ல தேவையில்லை.
நாடு அல்லது சமூகம் ஒன்றின் எழுத்தறிவு வீதத்தினை அளவிடும் அளவீடுகள், இடத்துக்கு இடம் வேறுபாட்டை காட்டக்கூடியன. இருப்பினும் பொதுவாக ஒரு சமூகத்தில் நாளாந்த செய்தித் தாள்களை வாசிக்கும் ஆற்றல் உடையவர்களின் சதவீதமானது அச்சமூகத்தின் எழுத்தறிவு வீதமாக உள்வாங்கப்படுகிறது. அப்படி பார்க்கின்றபோதிலும் அளவீடுகளின் அடிப்படையில் மலையகத்தில் நாளாந்த செய்தி தாள்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவே.
இன்றைய நிலையில் தகவல் சேகரிப்பும் தகவல் பரிமாற்றமுமே உலகை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில் சாதாரணமாக கணணி ஒன்றை இயக்கக்கூடிய தனி நபர் ஒருவருக்கும் தனது ஆற்றல் விருத்திக்கு வாசிப்பு முக்கியமானதாகும்.

மலையகத்தில் சிறந்த எழுத்தாளர்களும், அவர்களுடைய தரமான நூல்களும் வெளியாகின்றன. இருப்பினும் அதற்கான சிறந்த வரவேற்பும், முறையான சந்தைபடுத்தலும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் ஊக்கம் குறைவடைகின்றது. அதேபோல உலகவங்கி உள்ளிட்ட பல அமைப்புகள் பாடசாலைகளில் பல இலட்ச ரூபாய் செலவிலான நூலகங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அது முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கான ஊக்குவிப்பு அடிமட்டத்திலிருந்து தருவிக்கப்படுவதில்லை. அதேபோல பொது நூலகங்களை நாம் பயன்படுத்துவது மிகவும் குறைவு.

பொது நூலகங்களில் தமிழ் நூல்கள் குறைவு தான். காரணம் நாம் தினசரி செய்தி தாள்களையே படிப்பதில்லை. இதில் புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாவதை விட இல்லாமல் இருப்பது மேல். பல குறைபாடுகள் இருப்பது நானும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை. எனினும் இருப்பவைகளை முறையாக பயன்படுத்தி முன் செல்லவேண்டும்.

இன்றைய இருபத்தொராம் நூற்றாண்டில் தேடல் என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய கல்வித்திட்டதுக்கமைய நூலகங்களும், கணணி இணையத்தளங்களும் இன்றியமையாதனவாகும். வாசிப்பு கலாசாரத்தை மேலோங்க செய்ய இதுவே அத்தியாவசியமான சாதனங்களாகும். இதன் குறைகள் நிவர்த்திக்கப்பட்டு வாசிப்பு கலாசாரம் மேலோங்க வேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.

Monday, October 11, 2010

காலம் மாறிவிட்டது : பெண்ணோட்டம்

என்னடா தலைப்பு இது, கண்ணோட்டம் தெரியும் ஆனால் இதென்ன பெண்ணோட்டம் என்று பார்க்கின்றீர்களா? பெண்களைப் பற்றி தான் சொல்ல போறேன். அப்பப்போ கலியுகமென்று பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் நமக்கு எல்லாமே ஜாலி தான்.

பாரதி கண்ட புதுமைப் பெண்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். ஒரு காலத்தில் வீட்டடிமைகள் என சொல்லி விடுதலை தேடியவர்கள் பெண்கள். இவர்களின் விடுதலைக்காக இன்றும் போராடுகின்றனர். இவர்களின் நலன் கருதி ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை தொடர்ந்து மார்ச் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாப்படுகிறது. ஆனால் இவர்கள் எதிர் பார்க்கும் விடுதலை என்ன என்பது தான் புரியவில்லை.

இன்றைய பரந்துப்பட்ட உலகில் ஆண்களை விட பெண்களின் வளர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கிறது. ஒரு சில வளர்ந்த நாடுகளிலும், வளர்முக நாடுகளிலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களிலும் பார்க்க அதிகமென்றே கூறலாம்.

எல்லா துறைகளிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள். இது ஓரிரு தசாப்தங்களுக்குள் ஏற்ப்பட்டிருக்கும் பெண்களின் ஒரு புரட்சியே தான். இருப்பினும் காலம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய ஒரு சில பெண்களின் போக்கு வருந்த தக்கதே. அத்தோடு தொழிநுட்ப வளர்ச்சியின் போக்கு இந்த நிலைப்பாட்டை இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதற்கு ஒரு உதாரணம் கூட சொல்லலாம்.
 
ஒரு சவர்க்கார விளம்பரத்துக்கு ஒரு ஆண் மார்போடு துணியை கட்டிக்கொண்டு நான்கு பக்கமும் மூடப்பட்ட அறையில் சவர்க்கரமிட்டு குளிப்பார். ஆனால் அதுவே ஒரு பெண் நீச்சளுடையோடு உச்சி மலையில் இருந்து ஆத௬ருக்குல் குதித்து நீராடுவாள். இதில் வேடிக்கையை பார்த்தீர்களா? ஜட்டியோடு ஆற்றில் துள்ளிக் குதித்து நீராட வேண்டிய ஆண் குளியலறையிலும், குளியலறையில் குளிக்க வேண்டிய பெண் நீச்சலுடையில் ஆற்றில் குளிப்பது போல காட்சி... கலியுகம்பா......!!

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே போவதென்றால் எத்தனை கேள்வி கணைகள்?? அனால் அந்த நிலை இன்று இல்லை தான். சுதந்திரம் என்பது முடக்கப்படுவது சிறந்ததல்ல. ஆனால் மனிதனுக்குள் ஒரு சில வரையறைகள் இருக்கிறது. அதனை மீறினால் என்ன செய்வது?

பொதுவாக ஆங்காங்கே பெண் அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள் இடம்பெறுகின்றன. அதற்க்கான கண்டன பேரணிகளும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அத்துமீறல்களால் ஆண்களை கண்டாலே தனியாக செல்லும் பெண்களுக்கு இன்றும் ஒருவிட பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே தலைகீழாக மாறுமானால்??

இப்படி தான் இன்றைய பத்திரிக்கையில் இடம்பெற்ற சுவாரசியமான (பத்திரிக்கையின்) செய்தி. ஜிம்பாப்வே நாட்டில் "பெண்களால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண்கள்" என்று செய்தி வந்திருக்கிறது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் எதிலெல்லாம் வளர்ச்சி கண்டு விட்டார்கள் பார்த்தீர்களா? போலீஸ் அதிகாரி முதல் அறுபது வயது பெரியவர் வரை விட்டு வைப்பதில்லையாம்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த அறுபது வயது முதியவரை ஒரு இடத்தில் வைத்து தனது காரில் ஏற்றியிருக்கிறார்கள் மூன்று பெண்கள். அவரின் வீட்டில் இறக்குவதாக சொல்லி அவரை பாலியல் சேட்டை செய்து, அவரது வீட்டிலிருந்து 80 மைல் தூரத்தில் எறக்கி விட்டு சென்றிருக்கிறார்கள். எங்கே போய் சொல்வது?

அடுத்தது சமூக வலைப்பின்னல் இணைய தளங்கள் மூலம் நடக்கும் அட்டூழியங்கள். இதையெல்லாம் விட ஒரு கொடுமை போதைப் பொருளுக்கு அடிமையாகும் பெண்கள் ஏராளம். இப்படி ஏராளம் சொல்லி கொண்டே போகலாம். இதற்கு தீர்வு தான் என்ன???

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits