Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Thursday, December 31, 2009

இணைய தள முகவரி விரைவில் தமிழில்



உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான இணைய தளங்கள் இருப்பது எல்லோரும் அறிந்த விடயமே. இவை அனைத்தும் ஆங்கிலம் எனும் பொது மொழியிலேயே இருந்து வருகிறது. இன்றைய அளவில் நாம் ஆங்கிலத்தில் தன இணைய முகவரிகளை அமைத்து வருகிறோம். இது ஏனைய மொழிகளுக்கும் சொந்தமாக போகிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.

உலக இணைய தள முகவரிகளை நிர்வகிக்கும் ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) அண்மையில் அறிவித்துருக்கிறது. இதுவரை காலமும் நடைமுறையில் ஆங்கில எழுத்துக்களும் இலக்கங்களுமே (a to z, 0 to 9) இருக்கின்றன. இது விரைவில் ஏனைய மொழிகளுக்கும் சொந்தமாக போகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு இணைய புரட்சியாக நாம் கருதலாம். இது எதிர்காலத்தில் பாரிய தொழிநுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.





ஆனால் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளில் முகவரிகள் அமைக்கப்படும் போது இணையத்தளம் இன்னும் பல கோடி மக்களை சென்றடையும் என்பதில் ஆச்சரியம் இல்லை. எந்த மொழியில் இது அமைக்கப்பட்டாலும் இதன் இறுதிச்சொல் .com , .net , .org , .gov போன்ற ஒன்றில் தான் முடிவடைய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


இது அநேகமாக முதலில் சீன, அரபிக் மற்றும் ரஷ்ய மொழிகளுக்கு தான் அனுமதி கிடைக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. ஆனால் விரைவில் இது எல்லா மொழிகளையும் சென்றடைய இருக்கிறது. இது ஏற்கனவே சீன கற்றும் தாய்லாந்து நாடுகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இயங்கி வருகிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்னேற அமெரிக்க மற்றும் சிங்கபூர் நாடுகளில் தமிழ், சீனம், ஜப்பானிய மொழகளில் இணைய முகவரிகள் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இது தொடக்கத்தில் வெற்றி பெற்றாலும் பின்னர் இது இந்திய போன்ற நாடுகள் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டன. ஆனால் ICAAN இன் அனுமதியை அடுத்து தொழிநுட்பம் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. அத்தோடு இணைய பயன்பாட்டிலும் உலக பொருளாதாரத்திலும் நிச்சயமாக வளர்ச்சியினை வெகு விரைவில் காணலாம்.

Tuesday, December 29, 2009

BRIEF OVERVIEW OF PLANTATION COMMUNITY IN SRI LANKA


The Indian Diaspora (South Indian) was brought into Sri Lanka during the colonial rule to work in the British-introduced Plantation Sector in the late 19th Century.

The plantation community (Indian Origin Tamils) was disenfranchised inthe late forties and made stateless to deny social and legitimate rights.

There had been a forty years hiatus created due to the so-called disenfranchisement.

The disparity continued until1977, when the Grate Leader, Late Hon. Saumyamoorthi Thondaman, National Leaderrepresented the India Diaspora in Sri Lanka, entered the Parliament by ballotfrom the Nuwara Eliya District.

In the year 1978, late Hon.Thondaman sworn in as the Cabinet Minister.

The issue of asymmetrical delivery of service such as “Education, Socio Economic Development, Employment Opportunitiesin the government and Private Sectors, Housing, Infrastructure Development”etc.,  was gradually but steadily resolved by late Hon. Thondaman.

Notwithstanding hisindefatigable effort to have the community served as equal as the othercommunities in Sri Lanka, we have still areas needing appropriate and timelyattention owing to the forty years hiatus referred to above, which keeps thecommunity lagging behind in comparison with that of the communities in SriLanka.

With the foregoingsituation in place Hon. Arumugan Thondaman, National Leader of more than 1.5million Indian Diaspora and Minister of Youth Empowerment and Socio EconomicDevelopment has been sincerely endeavouring towards achieving “Educational,Socio Economic development” for the well-being of the community with a longterm plan of Community Transformation with the establishment of “Prajashakthi”and “Navashakthi” Programmes.

Comprehensive details ofthe two interdependent projects are attached hereto for your kind perusal andnecessary advice and support.

MODE OF FUNDING ON THE ONGOING PROJECTS
The project activities arepresently undertaken based on funding by well-wishers, celebrities andphilanthropists from among the community, living abroad.  With the expansion of programme, the flow offunding is felt insufficient and invites donor funding.

EXPECTATION OF DONOR FUNDING
With the programme havinggathered momentum amongst all section of the community and the need to have theprogramme expanded towards the 450 Tea, Rubber and Coconut Estates, in otherwords 2,500 Divisions of Plantation Sector, we are bound to go for DonorFunding from Donor Organizations worldwide.

You being a recognizedpersonality in the States and get on well with various categories ofOrganizations and Celebrities, it is our opinion that you would well be in aposition to assist us to build up a solid Global Partnership.

BY: Mr. Nallusamy - AKEC Manager - Kotagala

Wednesday, December 23, 2009

ஊடலே காதலா??? வாழ்வை இனிமையாக்குவோம்


"காதல்" இது ஒன்றும் நாம் அறிந்திறாத புதிய தலைப்பொன்றல்ல. காரணம் இந்த காதல் என்பது எல்லோராலும் வாழ்த்தப்பட்டதும் அதற்கு நிகராக வசை பாடப்பட்டதுமாகும். சங்ககாலம் முதல் இன்றுவரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பழைய காதல் புது காதல் என கூறிக்கொண்டு காதலிப்பவர்கள் நம்மவர்கள். இருப்பினும் அந்த பழைய காதல் தான் இன்று நவீனமயபடுத்தப்பபட்டு எம்மவர்களுக்கு புதிய காதலாக தெரிகிறது. உதாரணமாக, அன்று கடிதத்தில் வந்தது இன்று SMS ல் ஓடுகிறது. காலத்துக்கு ஏற்றது போல வடிவம் மாறுகிறதே தவிர, பொருள் ஒன்றாகத்தான் இருக்கிறது.

அந்த கால காதலை விமர்சிப்பவர்கள் தான் தற்போதைய இளநரைகள். இக்காலத்திலும் உண்மை காதல் இருக்கிறது. ஆனால் அந்த கால வரலாற்றை பார்த்தால் இந்த கால காதல் தோல்விகள் உண்மை காதலின் விகிதத்தை குறைக்கிறது. இதற்கு காரணம், ஒரு சிலர் ஒரு ஒருவரை பார்த்து பிடித்தவுடன் காதல் கொள்கிறார்கள். பின்னர் காதலிக்க ஆரம்பித்தவுடன் சில நாள் ஓடும். அப்புறமென்ன ஒருவரை ஒருவர் தெரிய ஆரபித்தவுடன் மனம் பேதலித்துவிடுவார்கள். பின்னர் "அவ என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குற மச்சி" என்று காதலனும் "எல்லா ஆண்களும் இப்படிதண்டி" என்று பெண்களும் நண்பர்களுக்கு சொல்லிகொல்வார்கள். இதுவே இறுதியில் முற்றுப்புள்ளி வைத்துவிடும். எதையும் வேகமாக செய்யவே விரும்புவர்கள் இந்த காலத்து இளைஞர்கள். அந்த வேகமே இவர்களது காதலுக்கு தோல்வியை ஏற்படுத்தும் ஒன்றாகிறது. காரணம் வாழ்க்கையின் படிகளை ரசிக்க மறந்துவிடுவார்கள். உதரணமாக சொல்வதென்றால் 20 -20 ஆட்டத்தின் வருகைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளின் மவுசு பெருமளவில் குறைந்து வருகிறது. அதாவது போட்டியின் முடிவை எதிர்பார்ப்பவர்கள் ஆகிவிட்டனர் ரசிகர்கள். அதே போலத்தான் இந்த இக்கால காதலும் அவசர அவசரமாக முடிவை தேடி அழிவை தேடிக்கொள்கிறது. ஒரு பெண் அல்லது ஒரு ஆண் காதலிலே தோற்று இன்னொருவரை மணந்துவிட்டால்  எல்லாமே இல்லாமல் போய்விடும்.

இன்னொன்றை சொல்லியாக வேண்டும்.அதாவது திருமணத்தின் பின்பு இவ்வாறான பிரச்சினைகள் வருவதும் உண்டு. இதற்கு பெண்களின் நச்சரிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆண்கள் பேசும் ஒரு வார்த்தைக்கு பெண்கள் ஆயிரம் பேசுவார்கள். இது பொதுவாக ஆண்களுக்கு பிடிப்பதில்லை. நல்லவற்றை பேசுங்கள். இனிமையாக பேசுங்கள். காதல் இனிக்கும்.

வாழ்க்கையை ரசியுங்கள். அனுபவித்து வாழுங்கள். விட்டுகொடுத்து வாழுங்கள். உங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்தது போல வாழுங்கள். உங்கள் துணையை எப்பொழுதும் மகிழ்வியுங்கள்.

Tuesday, December 8, 2009

என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லலாமுன்னு

அன்பான வாசகர்களே! நீங்கள் தந்த வரவேற்புதான் என்னுடைய சிறிய வளர்ச்சிக்கு காரணம். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். என்னை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், என்னைப்பற்றி சொல்லலாமென்று நினைத்து இந்த ஆக்கத்தை தருகிறேன். காரணம் என்னுடைய சுயசரிதை எழுத நான் ஒன்னும் பெரிய மனுஷன் இல்ல. வாசித்து உங்களுடைய கருத்தையும் சொல்லுவிங்கன்னு எதிர்பார்க்கிறேன். 

ஈழ நாட்டில் பதுளை மாவட்டத்தில் லுணுகலை எனும் நகருக்கு அருகில் இருக்கிறது அடாவத்தை தோட்டம். அத்தோட்டத்தில் எல்டோராடோ எனும் இடத்தில் 1986 -06 -16 நள்ளிரவில் திருமலைசாமி கமலா ஆகியோருக்கு பிறந்தவன் நான். எனது பெயர் நிஷாந்தன். நண்பர்களுக்கு பிடித்தது நிஷான். நான், அண்ணா, அக்கா இரண்டு பேர் என ஆறு பேர் என்னோட சேர்த்து. எனது ஆரம்ப கல்வி பது/திருமகள் தமிழ் வித்தியாலயத்தில் தான். எல்லாரும் பண்ணுவதை தான் இந்த வயசுல நானும் பண்ணினேனுங்க. நா மட்டும் விதி விளக்கா என்ன?? சுட்டி பண்ணினா சிரிப்பாங்க. அனால் தினமும் வெளியே போயிட்டு வம்பு பண்ணிட்டு வந்த யாருக்குதானுங்க பிடிக்கும்? வடிவேலு போல நான் ஆகிருவேன். முதலில் அப்பா ஆரம்பிப்பார். அடுத்தது அம்மா. அப்புறம் விழும் பாருங்க "அடி" அண்ணாகிட்ட...சொல்லனுமா? முடியல இப்பயும். வீட்டுல கடைசி பிள்ள என்பதால் எல்லாருக்கும் [அண்ணா தவிர] செல்ல பிள்ளை நானுங்க. முதலில சொன்னது போல அடி வாங்குறதும் நானுங்க... இப்படியே போச்சு என்னோட ஒன்பதாம் வகுப்பு வரைக்கும். பத்தாம் வகுப்புக்கு நான் பது/பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு போனேன். அங்க போன நேரம் என்னவோ தெரியல வீட்ட கொஞ்சம் நல்ல புள்ள ஆகிட்டேன். ஊருலயும் அப்படி தான்.

முதல் நாள் வகுப்பறைக்கு பயத்தோட போயிட்டு கடைசி வரிசையில உட்கார்ந்தேன். எல்லோருமே எனக்கு புதியவர்கள். எப்படி அறிமுகம் செய்வது என்று நினைக்கும் கணத்தில் பஞ்சலிங்கம் [எனது கணித ஆசிரியர்] எல்லோரையும் பரிட்சைக்கு ஆயத்தமாக சொன்ன போது எனக்கு தூக்கி வாரி போட்டது. காரணம் அப்போதுதான் நான் வகுப்பறைக்குள் நா அமர்ந்தேன். வருவது வரட்டும் என்றெண்ணி பேனை ஒன்றும் கடதாசி ஒன்றும் எடுத்து தயார் ஆகினேன். பத்து வினாக்கள். இது முதல் நாள் படிபித்தது எல்லாருக்கும். ஆனால் நான் புதிது. பரீட்சை பெறுபேறு எனக்கு தொண்ணூறு புள்ளிகளை தந்தது. என்னுடன் இன்னும் மூவர் அதே புள்ளிகள். அவர்கள் தான் வழமையான கில்லிகள் [கணித பாடத்தில்]. என்னுடைய புள்ளி ஒரே கணத்தில் என்னை வகுப்பறைக்கு அறிமுகம் செய்தது. அன்று முதல் அந்த கில்லிகள் என்னுடைய நல்ல நண்பர்கள். பத்து முடிந்து பதினொன்று. க.பொ.த [சா/தர] பரிட்சை முடிந்து உயர் தரமும் அங்கேயே ஒருவாராக முடிந்தது. இந்த பள்ளி பருவம் நாம் மன்றாடினாலும் திரும்ப வரபோவதில்லை. ஆனால்......

அதன் பின்னர்தான் எனக்கு பிரஜாஷக்தி செயல்திட்டத்தில் மக்கள் தொடர்பு இணைப்பாளராக வேலை கிடைத்தது. அங்கே என்னை போன்ற நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள். எல்லோரும் அரட்டைக்கு குறைவில்லாதவர்கள். எனக்கு மிகவும் பிடித்த கணினி துறையில் வேலை கிடைத்தது சந்தோசம்.  அப்போது தான் என்னுடைய சிறந்த நண்பரான பிரபா எனக்கு அறிமுகமானார். ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு திருப்புமுனை இருக்கும். அதற்கு பின்னால் யாரோ ஒருவர் இருப்பார். அப்படித்தான் என் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இவர். என் அறிவை வளர்க்க உதவியவர். எனக்குள் ஒரு ஆற்றலை புகுத்தியவர் என்றால் மிகையாகாது.  இதற்கு இந்த பிரஜாசக்தியும் ஒரு திருப்பு முனைதான் என் வாழ்வில். அதிலே நான் கண்டெடுத்த ஒன்றுதான் "தியா"  எனும் தியாகேஸ்வரி. புரிஞ்சிருக்குமே.. எனக்குள் அன்பை வளர்த்து புதிய உலகுக்கு இட்டுசெல்கிறவள். ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டு ஓடுகிறது எங்களுடைய காதலுக்கு. அவளும் என்னுடன் தொழில் புரிபவள். வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்துகொண்டது அவளிடம் தான். இதிலே பல நண்பர்கள் எனக்கு. அவர்களே என்னுடைய பலம். என்னுடையே ஒவ்வொரு அடிக்கும் ஏணியாக நிற்பவர்கள்.

எனக்கு பிடித்தது நீல நிறம். விரும்பி சாப்பிடுவது வீட்டு சமையல். வாசிப்பது துப்பறியும் நாவல்கள்.இணைய தேடல்கள் மற்றும் நண்பர்களுடனான அரட்டை ரொம்பவும் பிடித்தது. நான் பிறந்த நாட்டுக்கு ஏதேனும் செய்ய ஆசை படுகிறேன். இந்த நாடுதான் எனக்கு மிகவும் பிடித்ததும் அதிகமாக நான் நேசிப்பதும்.விரும்பி விளையாடுவது கிரிக்கெட் மற்றும் கபடி. அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கு. அதாலேயே குடும்பத்துல வாங்கி கட்டிக்குவேன். எதிர்காலத்தில் என்னுடைய அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையாக, என்னுடைய தியாவுக்கு நல்ல காதலன் மற்றும் ....எல்லாமாக, என் தோழர்களுக்கு நல்ல நண்பனாகவும்  நாட்டுக்கு நல்ல பிரஜையாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.......***.......

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits