Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Friday, August 19, 2011

இலங்கையும் ஆஸ்திரேலியாவும் 04வது போட்டி


சில சில மாற்றங்களோடும் புதிய வேகத்தோடும் இலங்கை அணி நாளைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இருபதுக்கு 20 போட்டி தொடரை கைப்பற்றிய இலங்கை ஒருநாள் தொடரையும் இலகுவாக கைப்பற்றும் என எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இங்கிலாந்தில் படுதோல்வியை சந்திக்கும் இந்தியாவுடன் இலங்கையை ஒப்பிட்டு வசைபாடினர் பலர். எனினும் புதிய பல வியூகங்களோடு மூன்றாவது போட்டியை வென்றெடுத்தது இலங்கை. என்ன நம்ம இலங்கை என்டா சும்மாவா??? 

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை ICC தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை அடைந்தது. இருப்பினும் இந்த இரண்டாம் நிலையை தக்கவைக்கும் நிலை நான்காவது போட்டியின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. அத்தோடு போட்டி தொடரை சமநிலை படுத்த பெரும்பாலும் இலங்கை முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹம்பாந்தோட்டை மைதானம் பெரிதாக சுழல் பந்துக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக வேகப்பத்து வீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. இது தான் இலங்கையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. நாளை நடைபெறவுள்ள ஆர் பிரேமதாச மைதானம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமானது.  எனவே இலங்கை வெற்றிபெற அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இறுதியாக இந்த மைதானத்தில் இவ்விரு அணிகளும் உலககிண்ண போட்டி தொடரொன்றில் சந்தித்தன. இருப்பினும் அந்த போட்டி முடிவின்றி மழையினால் கழுவப்பட்டது. எனவே நாளைய போட்டி முடிவொன்று எய்த பிரார்த்திக்கலாம்.

இதுவரை நடந்த 03 போட்டிகளில்....
இலங்கை
லசித் மாலிங்க மூன்றாவது போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதேபோல உபுல் தரங்க 111 ஓட்டங்களை குவித்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களோடு சிறந்த கிரிக்கெட்டினை வழங்கும் சங்கா, வேகத்துக்கு டில்ஷான் மற்றும் மஹேல.இவர்களோடு சுழல் பந்து வீச்சாளர்களும் இணைந்துகொள்ளலாம்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை பொருத்தமட்டில் போல்லிங்கேர் (Bollinger) மாத்திரமே பந்து வீச்சில் மிரட்டுகிறார். இந்த தொடரில் மொத்தமாக 08 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவரோடு துடுப்பாட்டத்தில் பொன்டிங், வாட்சன், கிளார்க், மேக் ஹஸ்ஸி என கலக்குகின்றனர். இவர்களில் பொன்டிங் தவிர ஏனையோர் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. வாட்சன் முதல் போட்டியில் விலாசியதொடு சரி. ஏனையோர் பொண்டிங்கோடு சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கியவர்கள். இருப்பினும் இலங்கையின் சுழலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அணி எதிர்பார்ப்பு...
இலங்கை
இறுதியாக நடந்த போட்டியில் இலங்கை வென்றிருந்தாலும் எல்லோரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. எனவே பெரும்பாலும் சாமர சில்வா மற்றும் சந்திமால் வெளியேற்றபடலாம்.  மாறாக மூன்றாவது போட்டியில் விளையாடாத அஞ்சேலோ மேதீவ்ஸ் மற்றும் சுராஜ் ரண்டிவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க படலாம். இங்கிலாந்து பிராந்திய அணிகளோடு விளையாடி வரும் இலங்கை A அணிக்குலாமில் இருக்கும் சீக்குகே பிரசன்ன உடனடியாக இலங்கைக்கு அழைக்கப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை பொருத்தமட்டில் இருவர் மாத்திரமே பிரச்சினைக்குரியவர்கள். பிரட் ஹட்டின்!!! இவர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமாகும். இவர் பெரும்பாலும் அணியில் நீடிப்பார் என தோனுகிறது. காரணம் இவருடைய இடத்துக்கு இன்னொருவர் இல்லை என்பது. மற்றையவர் ஸ்டீவென் ஸ்மித்!!! இவர் சகலதுறை வீரர். ஆனால் தொடர்ச்சியாக தடுமாறுகிறார். எனவே இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜான் ஹஸ்டிங்க்ஸ் களமிறக்கப்படலாம்.

சுவாரஸ்ய தகவல்கள்
  • குமார் சங்கக்கார தனது 300வது போட்டியில் விளையாடுகிறார். இலங்கையின் ஆறாவது வீரராக இவர் இந்த மைல் கல்லை எட்டுகிறார். வாழ்த்துக்கள் சங்கா!!!
  • உபுல் தரங்க மேலும் ஒரு சதத்தை பெறுவாரானால் இலங்கையர் ஒருவரால் ஒரு ஆண்டில் பெறப்பட்ட அதிகூடிய சதங்கள் எனும் சனத் ஜெயசூரியாவின் சாதனையை சமப்படுத்துவார். சனத் 2006 ஆம் ஆண்டு ஐந்து சதங்களை பெற்றதே சாதனை.
  • மைகில் கிளார்க் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற போட்டிகளில் தோல்வியடைந்ததே அதிகம். பாருங்கள்!! நாணய சுழற்சியில் வென்ற ஒன்பது போட்டிகளில் நான்கில் தோல்வி. மாறாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்த 21 போட்டிகளில் 03 போட்டிகளில் மாத்திரமே தோல்வி... \\\தலைமைகள் பலவிதம்.. அதில் இது ஒருவிதம்..///

Wednesday, August 17, 2011

நண்பியை காதலியாக்க.. | காதலியை குஷிபடுத்த.... கொஞ்சம் டிப்ஸ்....


யாரும் தப்பா நினைச்சிராதிங்க... இதில் எனக்கு கொஞ்சம் அனுபவம். அதை தான் இங்கே பகிர்கின்றேன். "யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெருக" இப்படி சொல்லுவாங்க இல்ல. அதான் என்னால முடிந்த வரைக்கும் நம்ம பசங்களுக்கான கொஞ்சம் டிப்ஸ்.... (யாரும் திட்டாதிங்கப்பா....)

  • உங்கள் நண்பியை தேர்ந்தெடுங்கள் (ரொம்ப முக்கியம் பாஸ்.. வாழ்க்கையை  தீர்மானிக்கிறது இதுதான்.)

  • எந்நேரமும் தொடர்பிலிருங்கள். (அப்போது தான் இன்னொருவன் பற்றி சிந்திக்க நேரமிருக்காது.)

  • ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக இருங்கள். (இதை தான் அதிக பெண்கள் விரும்புவார்கள்.)

  • அவளுடைய விடயங்களில் பொறுமையாக அமைதியாக முடிவெடுங்கள்.

  • அடுத்தவர்கள் உங்களை "இதாண்டா புள்ள" என்று மதிக்குமலவுக்கு நடந்துகொள்ளுங்கள். (உங்கள் சித்து விளையாட்டுக்கள் அவளுக்கு தெரிய வேண்டாம்.)

  • எல்லோரையும்விட அதிக அன்பு காட்டுங்கள். (காலம் போக போக நண்பர்கள் மற்றும் உறவினர்களை விட்டு உங்கள் பக்கம் சைகின்றால என்பதையும் அவதானித்து கொள்ளுங்கள்.)

  • அவளுடைய குடும்பத்தாருடன் நெருங்கிய தோட்பை வைத்து கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுக்கு சின்ன சின்ன உதவிகளை இவளுடாக செய்யுங்கள். (பிற்காலத்துக்கு உதவும்.)

  • A முதல் Z வரை அனைத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். (உங்கள் மீதான பிடிப்பு அதிகரிக்கும்.)

  • அந்தரங்க விடயங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். (நகைசுவையாக மட்டும்... #நான் பொறுப்பல்ல#)

  • சின்ன சின்ன சண்டை, கோவங்களை வளர விடாதீர்கள். விட்டுகொடுத்து அடுத்த நொடியே இருவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.

  • அவளுக்கு பிடித்தவை எல்லாம் தெரிந்து வைத்துகொள்ளுங்கள். கூடவே அவைகளை அவளுக்கு கிடைக்கசெய்து அசத்துங்கள். (அவளுக்கு பிடித்தவைகளை வாங்கி கொடுங்கள்.)

  • அடிக்கடி வெளியே செல்லுங்கள். (தனிமையான இடங்கள் நல்லது.)

  • உங்களுக்கான தெரிவுகளை அவளூடாக மேற்கொள்ளுங்கள். (உடை, சப்பாத்து, ect...)

  • அதிக நெரிசலான தருணங்களில் கை கோர்த்து செல்லுங்கள். இது பெண்கள் அதிகமாக எதிர்பார்ப்பது. (மெதுவாக நடந்து செல்லுங்கள்.)

  • அவளை தனிமை படுத்தாதிர்கள். கவலையான தருணங்கள் உங்களுக்கு வாய்ப்பானவை. பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  • அவள் தரும் porutgalai பத்திரபடுத்தி வைத்துகொள்ளுங்கள். தருணம் பார்த்து காட்டுங்கள். அசந்துபோவாள்.

  • குறிப்பாக அவள் இருக்கும்போது ஏனைய பெண்களோடு பேசுவதை தவிர்த்துகொள்ளுங்கள்..
 
  • அவளது தேவைகளை எப்பாடு பட்டாவது செய்து முடியுங்கள்.

பிறகென்ன உங்களுக்கு ஜாலிதான். அவளே காதலை தெரிவிக்கும்வரை நீங்களாக சொல்லாதீர்கள். தருணம் பார்த்து உங்க வேலைய காட்டுங்க... அதான் சிகனல்.. இவ்வளவு செய்தும் உங்க வலையில் சிக்கவில்லை என்றால், அது பெண்தானா என்று கொஞ்சம் சோதித்து பாருங்கள்... வாழ்த்துக்கள்...!!

Sunday, August 14, 2011

ஐயோ! முதலிடம் போச்சே!!!!


சத்தியமா இத நா சொல்லலைங்க. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இதன் தலைப்பு செய்தி.. இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது யாவரும் அறிந்ததே. நடந்து முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.

மூன்றாவது தீர்மானமிக்க போட்டி ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கியது. தரநிலையை தக்க வைக்கும் நிலையுடன் இந்திய அணியும், தொடரை வெல்லும் வெறியுடன் இங்கிலாந்து அணியும் களமிறங்கின. ஆரம்பம் முதலே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி போட்டியையும் தொடரையும் வென்றேடுத்திருக்கிறது.

இத்தொடர் முழுதும் இங்கிலாந்து வீரர்களின் அசத்தலான விளையாட்டினை காணக்கூடியதாக உள்ளது. இதில் பிரஸ்னன், அன்டேர்சன், பரோட் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சும் குக், பெல் ஆகியோரின் வேகமும் தான் இந்தியா அணையை நிலைகுலைய வைத்திருக்கிறது.

****சேவாக்****
அத்தோடு மிகுந்த எதிர்பார்ப்புடன் தனது மூன்றாவது டஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட சேவாக் தனது 02 இன்னிங்க்ஸ்களிலும் "டக் அவுட்" முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

100 க்கு 100
இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று தான் சச்சின் டெண்டுல்கரின் 100 வது சதம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக மொத்தமாக 100 சதங்களை கடந்த பெருமைக்குரியவர் எனும் பெயரை எடுக்க இன்னும் ஒரு சத்தமே தேவையாகவுள்ளது. இருப்பினும் நடந்து முடிந்த 03 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் ஆல் சத்தத்தை பெறமுடியவில்லை. 

இதை இங்கிலாந்து அணியினர் தங்கள் மண்ணில் விட்டுகொடுப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்களோ என்னவோ????

நீண்ட பயணம்
கடந்த 2009 , டிசம்பர் மாதம் சர்வதேச தரநிலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது இந்தியா அணி. அன்று முதல் இங்கிலாந்துடனான மூன்றாவது போட்டி வரை உலக அரங்கில் முதல் நிலையோடு எல்லோராலும் பெரிதும் பேசப்பட்ட அணி 21 மாதங்களின் பின்னர் தனது பெயரை இழந்து இன்று அவமானத்தோடு தலை குனிந்திருக்கிறது. 

போட்டி ஆரம்பிக்கும் முதல் இந்தியா (125), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (117) என்ற புள்ளி அடிப்படையில் இருந்தது. தற்போதைய தோல்வியை அடுத்து இந்தியா அணி பின்னோக்கி வீசப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் 134 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்திருக்கிறது.

** இப்போதுள்ள நிலையில் இந்தியா அடுத்து வரும் 4 ஆவதும் இறுதியுமான போட்டியிலும் தோல்வியடைந்தால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அது சமநிலையில் முடியுமெனில் தனது இரண்டாவது நிலையை ஓரளவுக்கு நிறுத்திக்கொள்ள முடியும்.

முதல் தோல்வி
இதேவேளை டோனி தலைமையிலான அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்கு முன்னர் டோனி தலைமையிலான அணி 11 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது.

இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கேதிராக தலா 02 வெற்றிகளையும், இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கேதிராக தலா ௦௧ வெற்றியையும் என 08 தொடர்களில் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.

இதேவேளை தென்னாபிரிக்கா அணிக்கெதிராக 02, இலங்கைக்கு எதிராக ௦௧ என 03 தொடர்களை சமநிலை செய்திருக்கிறது. எனவே இங்கிலாந்தின் மணி இந்திய அணிக்கு பெரிய அவமானத்தை பெற்றுகொடுத்திருக்கிறது.

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits