Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Friday, July 30, 2010

முரளிக்கு "சேர்" பட்டம் வழங்கப்படுமா?

தனது மாய சுழலினாலும், தனது மந்திர புன்னகையாலும் பல நூற்றுக்கணக்கான விக்கெட்டுகளையும் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொள்ளைகொண்டவர் முரளி. அவரைப்பற்றி இன்னொரு கட்டுரை வரைவதில் பெருமையே.

"எனது பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்துவிட்டேன். இனி சாதிப்பதற்கு ஒன்றுமில்லை" என தனது ஓய்வின்போது தெரிவித்தார் முரளி. இது உண்மைதான்.அவரது பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தகாரர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 1300 க்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் முரளி. அதுமட்டுமில்லாமல் அவரது சராசரி விகிதம் 337 ஒருநாள் போட்டிகளில் 23.07 ஆகவும், 133 டெஸ்ட் போட்டிகளில் 22.72 உம் ஆகும்.

அண்மையில் முரளி ஓய்வுபெற்ற போட்டியில் எட்டு விக்கெட்டுகளை எடுத்தால் 800 எனும் மைல் கல்லை எட்டலாம் என்ற இலக்கு முரளிக்கு இருந்தது. அத்தோடு அவர் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிருபித்து காட்டவேண்டிய கட்டாய நிலை ஏற்ப்பட்டது என்பது உண்மையே. காரணம் டேரல் ஹெயார் போன்ற விசமிகளின் வாயை மூடுவதற்காகவே.

அந்த 800 எனும் இமாலய இலக்கை முரளி எய்தாவிட்டால் என்னை போன்ற ரசிகர்களுக்கு பெரும் ஏக்கமாகவே அமைந்திருக்கும்.

கிரிக்கெட் உலகின் ஞான தந்தை என அழைக்கப்படும் சேர் டொனால்ட் பிரட்மன் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அவரது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சராசரி விகிதம் 99.94.

இவரது கடைசி டெஸ்ட் போட்டியில் வெறும் நான்கு ஓட்டங்களை பெற்றால் சராசரி 100 ஆகியிருக்கும். அந்த நிலையில் தான் முரளியைபோல் அவரும் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இருப்பினும் அவர் தனது இறுதி போட்டியில் துரதிஷ்டமாக ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அவரால் அந்த மைல் கல்லை எட்டமுடியாமல் போனது.

இருப்பினும் பிரட்மன் போன்ற துடுப்பாட்ட வீரருக்கு நான்கு ஓட்டம் என்பது பெரிய விடயமல்லவே. ஆனால் முரளிக்கு அது ஒரு கடினமான ஒரு சவால்மிக்க இலக்கு எனலாம்.

இதற்கிடையில் மழை குறுக்கிட்டு ஒருநாள் முழுதும் மைதானம் கழுவப்பப்ட்டு போட்டி தடைப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலும் 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரட்மன் தவறவிட்டதை முரளி எட்டிபிடித்து சாதித்துவிட்டார்.

அன்று தனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய சேர் டொனால்ட் பிரட்மனுக்கு வழங்கப்பட்ட "சேர்" எனும் அதி சிறந்த பட்டம், இருவகை போட்டிகளிலும் வியத்தகு பல சாதனைகளை புரிந்து ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முரளிக்கும் வழங்கப்படுமா??? இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல. கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புமாகும்.

பாகுபாடின்றி இவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில்,  ஒரு தமிழன் என்றவகையில் நாமும் பெருமிதம் கொள்ளல்லாம். முரளி உன் நாமம் வாழ்க.....

Tuesday, July 27, 2010

இலங்கை மூன்றாமிடம்

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும், அதனை தொடர்ந்துமல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சாதனை வீரனின் சாகசங்களை தொடர்ந்து, இலங்கை 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது.


இதேவேளை ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததை தொடர்து அதன் சர்வதேச இடம் ஆட்டம் கண்டிருக்கிறது. இந்திய அணிக்கெதிரான இரண்டாவது போட்டியை தொடர்ந்து இலங்கை அணி ICC யினால் வெளியிடப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளுக்கான தரப்படுத்தலில் ஆஸ்திரேலியா அணியை புறம்தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இது இலங்கை அணி சுழல் மன்னனின் பிரியாவிடைக்கு இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து அளித்த பரிசாகவும் நாம் கருதலாம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக அசைக்க முடியாத ஒரு அணியாக ஆஸ்திரேலியா அணி வளம் வந்தது. சிறப்பான வெற்றிகள், தொடர்ச்சியான தொடர் மற்றும் போட்டி வெற்றிகள் என தனது இடத்தை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக முதலிடத்தை தக்கவைத்திருந்தது.

இருப்பினும் அதன் இருப்பிடம் தொடர்ச்சியாக ஆட்டம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதற்கு சிறந்த உதாரணமாக ICC யினால் வெளியிடப்படும் தரவரிசையை குறிப்பிடலாம்.


இந்நிலையில் தொடர்ச்சியாக இந்திய அணி (124) முதலாம் இடத்திலும், இரண்டாம் இடத்தில் தென் ஆப்ரிக்கா (120), மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா (116), நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியாவை விட ஒரு புள்ளி குறைவாக இலங்கை (115), ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து (108), ஆறாம்,ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் இடங்களில் முறையே பாகிஸ்தான் (84), நியூசிலாந்து (80), மேற்கிந்திய தீவுகள் (77) மற்றும் பங்களாதேஷ் (9) ஆகிய அணிகள் இருக்கின்றன.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியை தொடர்ந்து ஒரு சில மாற்றங்கள் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது.



இந்நிலையில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமானது. இலங்கை அணியை பொறுத்தவரையில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடக்கம் சாதனை, வெற்றியாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நம்பிக்கை துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் அவர் பெற்றுக்கொண்ட சத (நூறு) பிரதியானது ஒரு சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் SSC மைதானத்தில் பெற்றுக்கொண்ட அதி கூடிய சதமாக மாறியது.

இதேவேளை இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார தனது ஏழாவது இரட்டைச் சதத்தை இன்றையதினம் பூர்த்தி செய்தார். பிரக்யன் ஓஜாவினுடைய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை விலாசியதொடு 199 ஓட்டத்துக்கு வந்த சங்கா 7 வது இரட்டைச் சதத்தை கடந்தார்.


இன்றைய போட்டியில் சுழல் மன்னன் முரளியின் ஓய்வை தொடர்ந்து அஜந்தா மென்டிஸ் இணைக்கப்பட்டுள்ளதோடு லசித மலிங்க காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டில்ஹார பெர்னாண்டோ சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, July 23, 2010

சாதனையின் சிகரம், தன்னிகரற்ற வீரன் முரளி

இன்று எம் எல்லோருடைய மனமும் பூரித்திருக்கும் ஒரு நாள். எல்லோரும் பிரார்த்தித்த ஒரு நாள். தொலைகட்ச்சி பெட்டி முன்னாலும், வானொலி பெட்டி முன்னாலும் உணவு மறந்து அமர்ந்திருந்த நாள். இவாறு பலவற்றையும் நனவாக்கிய திருநாள். என்னடா இப்படி சொல்லுராநேனு பார்க்கலாம். ஆனால் தலைப்பு ஒன்றே போதும். ஆம் உலகின் நட்சத்திரம், சுழல் மன்னன், சாதனை நாயகன், இலங்கையின் கோடை, தமிழனின் பெருமை முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கும் பொன்நாள்.


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முரளிக்கு பிடித்த காலி மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கிறது. இப்போட்டியானது இவ்வருடத்தில் இலங்கை ஆடிய முதல் டெஸ்ட் போட்டியும் முரளியின் இறுதி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.

போட்டியின் ஆரம்பத்தில் 792 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த முரளி யாரும் எதிர்பாராத வகையில் தனது டெஸ்ட் போட்டிகளின் ஓய்வை அறிவித்திருந்தார். இருப்பினும் அனைவரது விமர்சனங்களும் ஏன் முரளி முதல் போட்டியிலேயே விலக வேண்டும்? அவரால் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்க முடியுமா என பலதரப்பட்ட வகையில் வெளிப்பட்டிருந்தன. ஆனால் இன்று உலகு முழுதும் மக்களை மகிழ்வித்து வான்வரை புகழ் பூக்க வைத்திருக்கிறார் முரளி.

எந்த ஒரு வீரரும் தன விடை பெறப்போகும் கடைசி போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்றே எண்ணுவார்கள். ஆனால் அது எல்லோருக்கும் சாதகமாக அமைவதில்லை. ஆனால் அது எம்மவர் சுழல் ஜாம்பவானுக்கு சாதகமாக அமைந்தமை எல்லோருக்கும் சந்தோசமே. இதில் நாமெல்லாம் பெருமிதம் கொள்ளவேண்டிய ஒரு விடயம், உலகின் பல சாதனைகளுக்கு சொந்தகாரர்கள் தமிழர்கள் என்றால் மிகையாகது. அவ்வரிசையில் எம்மவர் முரளியும் தனது முத்திரையை கிரிக்கெட் உலகில் பதித்திருக்கிறார். எனவே இவர் தாய் மண்ணுக்கும், தாய் மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

தற்பொழுது இவரின் புகழ் பாடாத ஊடகங்களே இல்லை எனலாம். இலங்கையில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் பத்திரிக்கைகள் பலதும் இதனை முன்பக்க செய்தியாகவும், ஒரு சில தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டிருக்கின்றன. அத்தோடு வானொலிகள் மற்றும் தொலைகாட்சிகள் முரளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி (ஒலி) பரப்புகின்றன.

இதில் சிறப்பம்சம் யாதெனில் முரளி மைதானத்துக்கு வரும்போது செங்கம்பளம் விரித்து வரவேட்க்கப்பட்டதொடு, 799 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த தருணம் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக மைதானம் சென்று வாழ்த்தியதோடு நினைவு கேடயம் வழங்கி வாழ்த்தியிருந்தார்.


இனி இவரை பற்றி பார்த்தால் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி கண்டியில் பிறந்த இவர் கண்டி புனித அந்தோனி கலூரியில் படித்தார். கல்லூரி வாழ்க்கையில் மித வேகப்பந்து வீச்சாளரான இவர் பின்னர் இடது பக்க சுழல் பந்துவீச்சாளராகவும் அதன் பின்னர் வலது பக்க சுழல் பந்து வீச்சாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார்.

1992 ஆம் ஆண்டு அவுஸ்திரலிய அணிக்கெதிரான போட்டியிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளிலும், 337 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள முரளி முறையே 800, 515 ஆகிய அதிகூடிய விக்கெட்டுகளுக்கு சொந்தகாரர். இதுமட்டுமல்லாது ஆசிய பதினொருவர், சென்னை சூப்பர் கிங்க்ஸ், ICC உலக பதினொருவர், கந்துரட்ட, கென்ட், லன்ஷியர், தமிழ் யூனியன் ஆகிய முதல் தர கிரிக்கெட் அணிகளில் விளையாடி வருகின்றார்.

அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்க்சில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் அவரது இறுதி போட்டியோடு சேர்த்து 67 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு போட்டியில் பத்து விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் 22 ஆகும். இவைகளும் முரளியின் உலக சாதனைகளுள் ஒன்றாகும்.

மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருக்கும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதோடு இதில் நூறுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை இங்கிலாந்து (112), இந்தியா (105), தென்னாபிரிக்கா (104) ஆகிய அணிகளுக்கேதிராக வீழ்த்தியிருக்கிறார்.


கிரிக்கெட் விடுத்து பலதரப்பட்ட சமூக சேவைகளை முரளி ஆற்றி வருகின்றமையும் வியந்து கூறத்தக்கது. அதில் குறிப்பாக இலகை 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமான வீடுகளை அமைத்து கொடுத்தமை குறிப்பிடலாம். முரளி உன் பனி தொடரட்டும்.

இவரின் இந்த பயணத்தில் பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் இருந்தும் மனம் தளராத முரளி வீறுகொண்டு சாதனைகள் பல படைத்திருக்கின்றமையை அனைவரும் வியந்து பாராட்ட வேண்டும்.

தன்னிகரற்ற சுழல் பந்துவீச்சாளராக கிரிக்கெட் உலகில் உலக சாதனைகள் பல படைத்து பெருமை சேர்த்து கொண்டிருக்கும் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் அப்புகழ் என்றும் மங்காது. அதே போல் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகும் பொது உன் புகழ் இன்னும் உச்சத்தில் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. முரளிக்கு நிகர், இணை வேறு ஒருவருமில்லை என்பதே உண்மை.

Sunday, July 11, 2010

சாதிக்குமா இலங்கை?? சரித்திரம் படைப்பாரா முரளி??

பத்தொன்பதாவது உலககிண்ண கால்ப்பந்தாட்டம் முடிவடையும் தருவாயில் இலங்கையில் ஆரம்பிக்கிறது ஐந்து நாள் போராடும் போட்டி. இலங்கை மண்ணில் மீண்டும் தனது முதலாவது தர இருப்பிடத்தை தக்கவைக்க இந்தியா இலங்கையோடு மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் ஆர்ம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற ஆசிய கிண்ண போட்டியில் கிண்ணத்தை இந்தியாவிடம் பறிகொடுத்த நிலையில் அதற்க்கு பரிகாரமாக இம்முறை பழிதீர்க்க இலங்கையும், வெற்றி மேல் வெற்றி குவித்து தனது இருப்பிடத்தை தக்க வைக்க இந்தியாவும் என்ன செய்ய போகின்றன என்பதை பொருத்து தான் பார்க்கவேண்டும். இதேவேளை கடந்த வருட இறுதியில் இந்தியா மண்ணில் இலங்கை அணி இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என்ற ரீதியில் தோல்வியடந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வருடத்தை எடுத்துக்கொண்டால் இலங்கை அணி எந்தவிதமான டெஸ்ட் போட்டிகளையும் விளையாடவில்லை. இந்தியா இவ்வருட ஆரம்பத்தில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளோடு விளையாடியிருக்கிறது. இதில் பங்களாதேஷ் அணியை 2:0 என்ற கணக்கில் வெற்றிகொண்டுள்ளதொடு தென் ஆப்ரிக்கா அணியை 1:1 என்ற ரீதியில் தொடரை சமன் செய்திருக்கிறது. இது தவிர வேறு எந்த டெஸ்ட் போட்டிகளும் விளையாடவில்லை.


இருப்பினும் இந்தியா அணி ICC டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திலும் இலங்கை நான்காம் இடத்திலும் இருக்கின்றன. இலங்கை சொந்த மண்ணில் இதுவரை இந்தியாவோடு பதினைந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடி இருக்கிறது. இதில் ஏழு போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையிலும், ஐந்து போட்டிகளை இலங்கையும், மூன்று போட்டிகளை இந்தியாவும் வெற்றிகொண்டுள்ளன. இறுதியாக 2008/09 பருவகாலத்தில் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அஜந்த மென்டிஸ் என்ற புதுமுகத்தோடு இந்தியாவை 2:1 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இப்போட்டிகள் முறையே காலி, SSC மற்றும் கொழும்பு பிரேமதாச விளையாட்டு அரங்கு ஆகியவற்றில் இடம்பெறவிருக்கிறது.

அணிகளின் நிலையை பார்த்தால், இலங்கை டெஸ்ட் குழாமில் மீண்டு மலிங்க மற்றும் டில்ஹார ஆகியோர் வந்திருக்கிறார்கள். கடந்தமுறை தொடரின் நாயகன் விருது பெற்ற அஜந்த மென்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். காரணம் தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வருகின்றமை. மலிங்க 2007 ஆம் ஆண்டுக்கு பின்னரான எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. அதேபோல டில்ஹார இறுதியாக கடந்தவருடம் பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடியிருந்தார்.

இதேவேளை இந்தியா அணியை பார்த்தால் புதுமாப்பிள்ளையான நம்ம டோனி தன்னுடைய மனைவியாடு (தேனிலவு பயணம் போல) இலங்கை வந்திருக்கிறார். அவருக்கு இந்த தொடர் ஒரு உட்சாகமானதாக இருக்கும் என நம்பலாம். 


சஹீர் கான் இந்தியா குழாமில் இணைக்கப்பட்டிருப்பினும் அவருடைய தோள்ப்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கர்னாடக வீரர் அபிமன்யு மிதுன் நிரப்பப்பட்டிருக்கிறார். இவர் இல்லாதது இந்தியா அணிக்கு பெரிய பாதிப்பு என்றாலும் இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் அந்த இடத்தை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

முரளி:
இந்நிலையில் உலகின் சுழல் மன்னன், உலக நாயகன் (எனக்கு முகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்) முரளி தனது முதலாவது டெஸ்ட் போட்டியுடன் தான் ஒய்வு பெற போவதாக அறிவித்திருக்கிறார். 132 டெஸ்ட் போட்டிகளில் 228 இன்னிங்க்ஸ்களில் விளையாடி 792 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 38 வயதான இவர் ஆடம்பரமில்லாத அமைதியான ஒரு வீரர், இவரது இழப்பு ஏற்கமுடியாத ஒன்று. இவரது தன்னம்பிக்கையும் எந்த நிலையிலும் மனம் தளராத குணமும் தான் இவரை உலக சாதனை நாயகனாக உயர்த்தியிருக்கிறது.


இச்சாதனை நாயகன் காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எட்டுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சரித்திரம் படிக்கவேண்டும் என்பது அவரது ரசிகனாகிய எனது ஆசையாகும். உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் கூட இனிமேல் நிம்மதி பெருமூச்சு விடலாம். முரளியின் ஒரு டெஸ்ட் போட்டியின் பந்துவீச்சு சராசரி விகிதம் 22.71 ஆக இருக்கிறது. எனவே இவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என பிரார்த்திப்போம்.


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் அண்மையில் ICC யினால் முடிவெடுக்கப்பட்ட நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் முறை அமுல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி அணியின் விபரங்களை பார்க்கலாம்.

இலங்கை அணி:
சங்கக்கார (C), முரளிதரன் (VC), டில்ஷான், தரங்க, மஹேல, சமரவீர, பிரசன்னா ஜெயவர்தனே, மேத்யூஸ், லசித் மலிங்க, ஹேரத், தம்மிக பிரசாத், சுராஜ் ரண்டிவ், கண்டம்பி, வெலகெதர, டில்ஹார, திருமணி




இந்திய அணி:
டோனி (C), விரேந்தர் சேவாக் (VC), கம்பீர், டிராவிட், டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரெய்னா, லக்ஸ்மன்,  முரளி விஜய், வ்ரிட்திமன் சஹா, ஹர்பஜன் சிங்,  சாகிர் கான், மிஸ்ரா, பிரக்யன் ஓஜா, இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த்

Tuesday, July 6, 2010

உலக கிண்ணம் யாருக்கு? இறுதி நேர கணிப்பு!


பத்தொன்பதாவது உலக கிண்ண கால்ப்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சுவாரசியமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டிகளில் இன்றையதினம் அரையிறுதி போட்டிகள் ஆரம்பமாகின்றன. அனைவரது எதிர்பார்ப்புகளும் கருத்து கணிப்புகளும் பொய்யாகி அதிர்ச்சிகளை அளித்துவரும் நிலையில் அரையிறுதியில் ஜெர்மனி, உருகுவே, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய அணிகள் களம் புகுந்துள்ளன.

இதில் மூன்று ஐரோப்பிய அணிகளும் (ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து) ஒரு தென் அமெரிக்க அணியும் (உருகுவே) காணப்படுகிறது. இதில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் அணியாக இருப்பது ஜெர்மனிதான். இளைஞர் பட்டாளம் எல்லோருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்து அனைவரது எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்களை தவிடு பொடியாக்கி தன் பக்கம் ஈர்த்திருக்கிறது அனைவரது பார்வையையும். இந்த அணிதான் கிண்ணத்தை வெல்லும் என தற்போது அனைவரது கருத்துக்களும் இருக்கிறது. குறிப்பாக இம்முறை பிரேசிலுக்கு அடுத்தப்படியாக கிண்ணத்தை வெல்லகூடிய அணியாக கருதப்பட்ட அர்ஜென்டினாவுக்கு 4:0 என்ற அடிப்படையில் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆக்டோபஸ் என்ற கடல் உயிரினத்தின் கணிப்பும் தொடர்ந்து மெய்ப்பித்து வரும் நிலையில் அடுத்த போட்டிக்கான அதனது கணிப்பு எவ்வாறு அமையபோகிறது என்பது தெரியவில்லை.

இதற்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் அணி மீதான நம்பிக்கை அனைவரது பக்கமும் இருக்கிறது. காலிறுதி போட்டியில் பராகுவே அணியுடன் போராடி வெற்றி பெற்றிருந்தாலும் அனைவரது பார்வையும் கணிப்பும் இதற்கு இரண்டாவதாக இருக்கிறது.

இதேவேளை ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் நாளையதினம் இறுதி போட்டிக்காக ஒன்றையொன்று மோதுகின்றன. இதில் வெல்லும் அணி கின்னாத்தை தன் வசம் படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏனைய இரு அணிகளுக்கும் (நெதர்லாந்து, உருகுவே) சம அளவான ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் உருகுவே மிரையவே போராடவேண்டியிருக்கும். நெதர்லாந்து உலகின் முதன்மை அணியான பிரேசில் அணியை காலிறுதி போட்டியில் வெளியேற்றியமை குறுப்பிடத்தக்கது. இதேவேளை தற்போதைய நிலையில் அதிக பலம்பொருந்திய அணியாக ஜெர்மனி அணியே இருக்கிறது.

இதேவேளை ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே இடம்பெற்ற போட்டிகளில் ஐரோப்பிய அணிகள் கிண்ணத்தை வென்றதில்லை என்ற அவப்பெயர் இருந்து வரும் நிலையில் இம்முறை அதற்கான காலம் பிறந்திருக்கிறது. உருகுவே மாத்திரமே வேறு கண்ட அணியாகும். அதனை விட ஏனைய மூன்று அணிகளும் முன்னிலை பெற்றிருப்பதால் பத்தொன்பதாவது கால்ப்பந்தாட்ட உலககிண்ணம் இம்முறையும் ஐரோப்பா கண்டத்துக்கு செல்லும் என உறுதிபட கூறலாம்.


இதேவேளை 2010 உலககிண்ண கால்ப்பப்ந்து போட்டியில் தங்க சப்பாத்தை (Shoe) வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதில் மூவரிடையே அதிக போட்டி நிலவுகிறது. அதிக கோள்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்ல 05 கோல்களுடன் முன்னிலையிலும், அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் முறையே 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.இவர்கள் நாளையதினம் மோதிக்கொள்ளும் போதுதங்க சப்பாத்து யாருக்கு என உறுதியாகும்.

இதேபோல் உருகுவே வீரர் டீகோ போர்லான், நெதர்லாந்தின் வெஸ்லே ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர். இந்த இரு அணிகளும் அரை இறுதியில் இன்று விளையாடுகின்றன. சிறப்பாக விளையாடி அதிக கோல்களை அடிக்கும் பட்சத்தில் இவர்களுக்கும் தங்க சப்பாத்து கிடைக்க வாய்ப்புள்ளது.

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits