Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.
Showing posts with label Reviews. Show all posts
Showing posts with label Reviews. Show all posts

Wednesday, February 16, 2011

ஆடுகளத்தில் இவர்களும் ஆட்டநாயகர்கள்??

மலையகத்தில் இப்பொழுது தான் குமுற ஆரம்பித்திருக்கிறது தேர்தல் களம். பல வர்ண கொடிகளோடும், பதாகைகலோடும் அங்கும் இங்கும் வழமை போல வாகனங்கள் வந்து போகின்றன. எம் மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் இந்த தேர்தல் காலங்களில் மட்டும்! தரக்குறைவாக இழிவாக பேசியவர்கள் கூட இன்று அம்மா, அப்பா என்றும் அவர்களின் வீட்டிற்கு சென்று தேனீர் அருந்தி உறவாடுவதும் அம்மம்மா....!!!


இன்றைய நிலையில் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் இத்தேர்தல் காலத்தில் பெரும்பாலும் மலையகத்தையே உற்று நோக்கியவண்ணம் இருக்கின்றன. அவைகளில் தொடர்ந்து வரும் செய்திகள் அவைகளை உறுதிபடுத்துகின்றன.

இந்நிலையில் மக்கள் மனங்களை கவர போட்டியாளர்கள் பிரமுகர்களின் வீடுகளுக்கும், வாக்காளர்களின் வீடுகளுக்கும் படையெடுக்கின்றனர் தினமும். தோட்டங்கள் தோறும் இலவச போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. 

இதுமட்டுமல்ல ரஜினி, விஜய் போன்றோரை போல பஞ்ச் பேச்சுகளும், விஜயகாந்த் போல வீர வசனங்களும், சத்தியராஜ், சந்தானம் போல ஜொள்ளுகளும் சினிமாவை (நடிப்பை) கண் முன் நிறுத்துகின்றன.

இதுவெல்லாம் நகைசுவைக்கென்றால்,  நமக்கெல்லாம் பழகி போன (பொய்யான) வாக்குறுதிகளுக்கு குறைவொன்றுமில்லை.

இம்முறை பிரசார கூட்டங்கள் எங்கம பெரிதாக இல்லை. அதற்கு மாறாக தலைவர்களுக்கும், நம்ம இலசுகளுக்கும் விருந்துபசாரம் தினமும் நடக்கின்றது.

இதுவெல்லாம் வழமை என்றாலும் யாருக்கு நாம் வாக்களிப்பது என்பது தான் தெரியவில்லை. இங்கு மீன் கடையில் மீன் வெட்டியா ஒருவன், வீடியோ சீடிகளை (அப்படிப்பட்ட படங்கள்) விற்பனை செய்த ஒருவன், ஊருக்கு தெரிந்து மூன்று மனைவிகளோடு வாழும் ஒருவன், மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒருவன் என பட்டியல் நீளுகின்றது.

இதில் யாருக்கு வாக்களிப்பது??? இலங்கையில் ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்றாலும் இவர்களை போன்றோரை கட்சிகள் முன்னிலை படுத்தியிருப்பது தான் மக்களிடமுள்ள பெரும் கவலை. நான் குறிப்பிட்டது எனது பிரதேசத்தை மட்டுமே... ஏனைய பிரதேசங்களின் நிலை???

இவர்களென்ன வெறும் 5000/- சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யவா போகிறார்கள்??? இவர்களின் நோக்கம் அதுவெனில் அதற்கு அரசியல் ஒரு களமல்ல?? இவர்களெல்லாம் அரசியல் களத்திலே என்றால், அரசியல் ஞானம் பயின்றோரின் நிலை என்ன?? அவர்களின் சேவைகளுக்கு தான் மதிப்பெங்கே??
இதற்கெல்லாம் பதில் யார் சொல்வது?? சிந்தியுங்கள்... உங்கள் பதிலை மார்ச் 17 இல் விடை கூறுங்கள்...

Wednesday, December 29, 2010

ICC உலககிண்ணம் 2011 ஒரு பார்வை (வீடியோ)

1996 ஆம் ஆண்டினை தொடர்ந்து இம்முறை 2011 ஆம் ஆண்டும் உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கு கிட்டியுள்ளது. இம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் இலங்கையும் இந்தியாவும் உள்ளடங்குகின்றன. அண்மைய போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இவ்விரண்டு அணிகளின் ஆதிக்கமும் மேலோங்கியவண்ணம் காணப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககிண்ண போட்டிகளில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவே ஆசிய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறவிருக்கும் போட்டிகளின் அட்டவணை, அணிகளின் பிரிவுகள், விளையாடப்படும் மைதானங்கள் மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான அறிமுக வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளன.

அறிமுக வீடியோ


விளையாடப்படும் மைதானங்கள்


அணிகளின் பிரிவுகள்


போட்டிகளின் அட்டவணை

Wednesday, December 8, 2010

இலங்கையும் மழையும்

வீட்டிலிருந்து வெளியே போகும்போது அம்மா "குடை கொண்டு போகவில்லையா?" என்று உரக்க கத்துவது தினமும் நடக்கிறது தான். காரணம் இலங்கையின் காலநிலை அப்படி சீரற்று கிடக்கிறது. நாட்டின் பல பாகத்திலும் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகளில் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தொடர் மழை மற்றும் வெள்ளபெருக்கினால் இருபதுக்கும் மேற்ப்பட்டோர் இறந்துள்ளதாகவும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் காயமுற்றும் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை நம்ம பெருந்தலை மைதானத்தில் இடம்பெறவிருந்த கிரிக்கெட் போட்டியும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

என்னதாங்க பண்ணுறது??? நம்ம நாட்டுல என்ன சரி விஷேசம் என்றதும் உடனே மழை வந்துருது....

அப்படிதான் பாருங்க நம்ம நாட்ட மீட்டப்போ (சொல்லிகிறாங்க) மழை பெய்தது. ஒரு பட்டாசு கொளுத்த விடலையே... (அவங்கள)

அப்புறம் பார்த்திங்கனா அந்த ஓராண்டு வெற்றிய நம்ம நாடே எதிர்பார்த்து இருந்துச்சி... ஏன் ஏற்பாடுகளும் தடால் புடாலா நடந்தது.. என்னாச்சி?? அப்பாவும் கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சி.... தள்ளி போட்டு தான் பண்ணினாங்க...

இதே மாதிரி தாங்க நம்ம தலைவரோட இரண்டாவது பதவியேற்பு நடக்க முதல்ல.... (ஐயோ.. ஐயோ...) பாராளுமன்றத்துக்குள்ள வெள்ளம் புகுந்து கலாட்டா பண்ணிருச்சி... 

பாவம் நம்ம அமைச்சர்களும் உறுப்பினர்களும்... இராணுவ வண்டியில போனத பார்த்து நானே பரிதாப பட்டேன்... (கைதி மாதிரி தானே)

அப்போ வடக்கு கிழக்குல ஒரே மழையா இருந்துச்சி.. இப்போ தென்னிலங்கையில ஒரே மழையா இருக்குதுங்க....நம்ம தலைவரும் கஷ்டபடுறாரு நம்ம நாட்ட ஆச்சரியமா பார்க்கணுமென்று... (இது வேற விதமா..) அபிவிருத்தி பண்ண விடுதில்லையே...

இப்படி தாங்க... நம்ம மக்களும் அத இத சொல்லி பொலம்புறாங்க....

நம்ம கிண்ணத்து தலைவரு (ஜெனரல்) உள்ள இருக்கதால தான் இப்படி மழை நிக்காம கொட்டுதுன்னு... ( இது உண்மைங்களா..) அப்போ 2003 - 2004 பருவ காலப்பகுதியில இங்க ஒரே வெயில் கொடுமைங்க.. இனி நாட்டுல பஞ்சம் தான் என்று சொன்னவங்களும் நம்ம மக்கள் தான்... ஆட்சி மாறினா எல்லாம் சரி ஆகுமுன்னு சொன்னவங்களும் இவங்க தான்... நீங்களே தான் சொல்லனுமுங்க...

நடப்பது நன்மைக்கே...!!! எனக்கு வேலை கிடக்குதுங்க...

Monday, October 18, 2010

வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம்

ஐக்கிய நாடுகள் சர்வதேச நிறுவனமும், யுனெஸ்கோ கல்வி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் திகதியை உலக புத்தக தினமாக பிரகடனம் செய்துள்ளன. அதேபோல இலங்கை அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் வாசிப்பு வாரம், வாசிப்பு மதம் என அறிவிக்க தவறுவதில்லை. காரணம் எமது நாட்டின் எழுத்தறிவு வீதத்தினை தொடர்ந்து தக்க வைப்பதும், மக்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பதுமேயாகும்.

இந்த வாசிப்பு பழக்கமானது ஒருவருடைய பல்துறைசார் அறிவினை மேம்படுத்த உதவுகின்றது. வாசிப்பு கலாசாரம் என்பது ஒரு சாராரை மட்டும் சார்ந்தது அல்ல. இது சிறியோர் முதல் பெரியோர் வரை, அரிச்சுவடி படிப்போர் முதல் மேதைகள் வரை அனைவரிடமும் குடிகொண்ட விடயமாகும். இருப்பினும் இன்றைய நிலையில் அது குறைவடைந்து செல்வது குறித்து பல்வேறுபட்ட அமைப்புகள் அறிவுறுத்திக்கொண்டே வருகின்றன.

இருப்பினும் இலங்கையை பொருத்தமட்டில் இக்கலாசாரமானது ஏனைய பிரதேசங்களை விட மலையகத்தில் காணாமல் போய்கொண்டிருக்கிறது. பொதுவாக சின்னத்திரை, பெரியத்திரைகளின் ஆக்கிரமிப்புகள் இந்த வாசிப்பு கலாசாரத்தை விரட்டியடிக்கிறது எனலாம்.

வீதிக்கு பத்து வீடியோ காட்சிகள் விற்ப்பனை கூடங்கள் இருக்கின்றன. இருப்பினும் ஒரு புத்தக கடையை தேடினால் இருப்பது அரிதே. இந்த திரைப்படங்களை விற்கும் கடைகளில் கூடும் கூட்டம் புத்தக கடைகளில் இருப்பதில்லை. குறிப்பாக மலையக வீடுகளில் திரைப்பட தட்டுக்கள் (DVD, CD) வைக்க இடமிருக்காது. ஆனால் புத்தகங்கள் பற்றி சொல்ல தேவையில்லை.
நாடு அல்லது சமூகம் ஒன்றின் எழுத்தறிவு வீதத்தினை அளவிடும் அளவீடுகள், இடத்துக்கு இடம் வேறுபாட்டை காட்டக்கூடியன. இருப்பினும் பொதுவாக ஒரு சமூகத்தில் நாளாந்த செய்தித் தாள்களை வாசிக்கும் ஆற்றல் உடையவர்களின் சதவீதமானது அச்சமூகத்தின் எழுத்தறிவு வீதமாக உள்வாங்கப்படுகிறது. அப்படி பார்க்கின்றபோதிலும் அளவீடுகளின் அடிப்படையில் மலையகத்தில் நாளாந்த செய்தி தாள்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவே.
இன்றைய நிலையில் தகவல் சேகரிப்பும் தகவல் பரிமாற்றமுமே உலகை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில் சாதாரணமாக கணணி ஒன்றை இயக்கக்கூடிய தனி நபர் ஒருவருக்கும் தனது ஆற்றல் விருத்திக்கு வாசிப்பு முக்கியமானதாகும்.

மலையகத்தில் சிறந்த எழுத்தாளர்களும், அவர்களுடைய தரமான நூல்களும் வெளியாகின்றன. இருப்பினும் அதற்கான சிறந்த வரவேற்பும், முறையான சந்தைபடுத்தலும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் ஊக்கம் குறைவடைகின்றது. அதேபோல உலகவங்கி உள்ளிட்ட பல அமைப்புகள் பாடசாலைகளில் பல இலட்ச ரூபாய் செலவிலான நூலகங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அது முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கான ஊக்குவிப்பு அடிமட்டத்திலிருந்து தருவிக்கப்படுவதில்லை. அதேபோல பொது நூலகங்களை நாம் பயன்படுத்துவது மிகவும் குறைவு.

பொது நூலகங்களில் தமிழ் நூல்கள் குறைவு தான். காரணம் நாம் தினசரி செய்தி தாள்களையே படிப்பதில்லை. இதில் புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாவதை விட இல்லாமல் இருப்பது மேல். பல குறைபாடுகள் இருப்பது நானும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை. எனினும் இருப்பவைகளை முறையாக பயன்படுத்தி முன் செல்லவேண்டும்.

இன்றைய இருபத்தொராம் நூற்றாண்டில் தேடல் என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய கல்வித்திட்டதுக்கமைய நூலகங்களும், கணணி இணையத்தளங்களும் இன்றியமையாதனவாகும். வாசிப்பு கலாசாரத்தை மேலோங்க செய்ய இதுவே அத்தியாவசியமான சாதனங்களாகும். இதன் குறைகள் நிவர்த்திக்கப்பட்டு வாசிப்பு கலாசாரம் மேலோங்க வேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.

Monday, October 11, 2010

காலம் மாறிவிட்டது : பெண்ணோட்டம்

என்னடா தலைப்பு இது, கண்ணோட்டம் தெரியும் ஆனால் இதென்ன பெண்ணோட்டம் என்று பார்க்கின்றீர்களா? பெண்களைப் பற்றி தான் சொல்ல போறேன். அப்பப்போ கலியுகமென்று பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் நமக்கு எல்லாமே ஜாலி தான்.

பாரதி கண்ட புதுமைப் பெண்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். ஒரு காலத்தில் வீட்டடிமைகள் என சொல்லி விடுதலை தேடியவர்கள் பெண்கள். இவர்களின் விடுதலைக்காக இன்றும் போராடுகின்றனர். இவர்களின் நலன் கருதி ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை தொடர்ந்து மார்ச் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாப்படுகிறது. ஆனால் இவர்கள் எதிர் பார்க்கும் விடுதலை என்ன என்பது தான் புரியவில்லை.

இன்றைய பரந்துப்பட்ட உலகில் ஆண்களை விட பெண்களின் வளர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கிறது. ஒரு சில வளர்ந்த நாடுகளிலும், வளர்முக நாடுகளிலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களிலும் பார்க்க அதிகமென்றே கூறலாம்.

எல்லா துறைகளிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள். இது ஓரிரு தசாப்தங்களுக்குள் ஏற்ப்பட்டிருக்கும் பெண்களின் ஒரு புரட்சியே தான். இருப்பினும் காலம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய ஒரு சில பெண்களின் போக்கு வருந்த தக்கதே. அத்தோடு தொழிநுட்ப வளர்ச்சியின் போக்கு இந்த நிலைப்பாட்டை இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதற்கு ஒரு உதாரணம் கூட சொல்லலாம்.
 
ஒரு சவர்க்கார விளம்பரத்துக்கு ஒரு ஆண் மார்போடு துணியை கட்டிக்கொண்டு நான்கு பக்கமும் மூடப்பட்ட அறையில் சவர்க்கரமிட்டு குளிப்பார். ஆனால் அதுவே ஒரு பெண் நீச்சளுடையோடு உச்சி மலையில் இருந்து ஆத௬ருக்குல் குதித்து நீராடுவாள். இதில் வேடிக்கையை பார்த்தீர்களா? ஜட்டியோடு ஆற்றில் துள்ளிக் குதித்து நீராட வேண்டிய ஆண் குளியலறையிலும், குளியலறையில் குளிக்க வேண்டிய பெண் நீச்சலுடையில் ஆற்றில் குளிப்பது போல காட்சி... கலியுகம்பா......!!

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே போவதென்றால் எத்தனை கேள்வி கணைகள்?? அனால் அந்த நிலை இன்று இல்லை தான். சுதந்திரம் என்பது முடக்கப்படுவது சிறந்ததல்ல. ஆனால் மனிதனுக்குள் ஒரு சில வரையறைகள் இருக்கிறது. அதனை மீறினால் என்ன செய்வது?

பொதுவாக ஆங்காங்கே பெண் அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள் இடம்பெறுகின்றன. அதற்க்கான கண்டன பேரணிகளும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அத்துமீறல்களால் ஆண்களை கண்டாலே தனியாக செல்லும் பெண்களுக்கு இன்றும் ஒருவிட பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே தலைகீழாக மாறுமானால்??

இப்படி தான் இன்றைய பத்திரிக்கையில் இடம்பெற்ற சுவாரசியமான (பத்திரிக்கையின்) செய்தி. ஜிம்பாப்வே நாட்டில் "பெண்களால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண்கள்" என்று செய்தி வந்திருக்கிறது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் எதிலெல்லாம் வளர்ச்சி கண்டு விட்டார்கள் பார்த்தீர்களா? போலீஸ் அதிகாரி முதல் அறுபது வயது பெரியவர் வரை விட்டு வைப்பதில்லையாம்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த அறுபது வயது முதியவரை ஒரு இடத்தில் வைத்து தனது காரில் ஏற்றியிருக்கிறார்கள் மூன்று பெண்கள். அவரின் வீட்டில் இறக்குவதாக சொல்லி அவரை பாலியல் சேட்டை செய்து, அவரது வீட்டிலிருந்து 80 மைல் தூரத்தில் எறக்கி விட்டு சென்றிருக்கிறார்கள். எங்கே போய் சொல்வது?

அடுத்தது சமூக வலைப்பின்னல் இணைய தளங்கள் மூலம் நடக்கும் அட்டூழியங்கள். இதையெல்லாம் விட ஒரு கொடுமை போதைப் பொருளுக்கு அடிமையாகும் பெண்கள் ஏராளம். இப்படி ஏராளம் சொல்லி கொண்டே போகலாம். இதற்கு தீர்வு தான் என்ன???

Saturday, September 25, 2010

இதாங்க எந்திரன் படம் (வீடியோ காட்சிகள்)

இந்திய திரைப்பட வரலாற்றில் ஹாலிவுட் விட்ப்பனர்களை தமிழ் சினிமாவுக்கு திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஒரு படம் என்றால் அது எந்திரன் தான்.ஹாலிவுட் சினிமாகாரர்களே நினைக்காத ஒன்றை தசாவதாரம் படம் காட்டியிருந்தது. அதனையும் தாண்டி மெகா பட்ஜெட்டில் (150 முதல் 175 கோடி) வெளிவரும் படம் எந்திரன். சங்கர் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. இவரது இலாபம் ஈட்டும் உத்தி எவருக்கும் தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம்.

அதிலும் இந்த படத்தின் கூட்டணியை பாருங்கள். நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய், பாடல்கள் வைரமுத்து மற்றும் இசை ஆஸ்கார் நாயகன் AR ரகுமான். இது தான் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டுவதற்கு காரணம்.

சரி இந்த படம் எப்படி இருக்கும். திரையரங்குக்கு போவதென்றால் இப்போ முடியாத காரியம். ஒரு மாதத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீந்திருக்கும். படம் பற்றிய ஒரு முன்னோட்டத்தை பாருங்களேன்.


அடுத்து பாடல்கள் பற்றி சொல்ல தேவையில்லை. அத்தனையும் சக்கை போடு போடுகின்றன. குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து வித்தியாசமான உத்திகளை இந்த என்திரனிலும் புகுத்தியிருக்கிறார் நம்ம AR ரகுமான். அதில் இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ.... என்ன பாட்டுய்யா....?? கலக்கிட்டாருல்ல. அதில் வரும் அத்தனை வரிகளும் ஒரு இந்திரனின் காதலை உணர்த்துகின்றது. காலங்கள் கானா காதல்.... கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு.... என் நீலப் பல்லாலே (Blue Tooth) உன்னோடு சிரிப்பேன்.... அந்த பாடலினுடைய வீடியோ காட்சியின் சிறு பகுதி பாருங்களேன்.


காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை... நியூட்டன் ஏலேக்ட்ரோன் உன் நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை.....என்னங்க இது அடுத்த பாடல். இந்த பாடலில் அழகு தேவதையை மேலும் அழகு படுத்தி காட்டியிருக்கிறார்கள். ரஜினியோ நம்ம சூர்யா மாதிரி கடற்கரையில ஆடுறாருங்க.. பாருங்களேன் இதையும்...


தமிழில் வரும் ஒரு ஹாலிவுட் ஆஸ்கார் படமென்று இந்திரனை குறிப்பிட்டால் மிகையாகாது. அந்தளவுக்கு தொழினுட்பம் புகுந்து விளையாடியிருக்கிறது. காட்சி அமைப்புகளும் சரி, அதற்கான பின்னணி இசையும் சரி பிரமிக்க வைக்கின்றது.

பாடல் வரிகள் அனைத்து இயந்திர மனிதனை உருக்கி வடித்திருக்கிறது. குறிப்பாக புத்துய மனிதா.. என்று தொடங்கும் பாடல் மனிதனை எலாம் அறிவை தட்டி எழுப்பியிருக்கிறது..

எந்திரன் நிச்சயம் தமிழ் சினிமாவில் தடம் பாதிக்கும்.

Monday, September 13, 2010

சூரியன் பண்பலையின் என்றென்றும் புன்னகை

உலக தமிழ் வானொலி வரலாற்றில் புதுமையை புகுத்தி தனக்கென ஒரு இடத்தை இன்றும் நிலை நிறுத்தி நிமிர்ந்த நடையில் பன்னிரண்டு வருடங்களை கடந்திருக்கும் ஒரு இலங்கையின் வானொலி தான் சூரியன் பண்பலை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வெற்றிநடை போடும் சூரியன் நேயர்களிடையே பல புதுமைகளை புகுத்தி அவர்களின் மனங்களை வென்று வருகின்றது. காலத்திற்கேற்றால் போல் தனது நிகழ்ச்சிகளை மாற்றி பல புதுமைகளை செய்து காட்டியிருக்கிறது. அந்தவகையில் தனது நேயர்களை மகிழ்வித்து வரும் வானொலியான சூரியன் பண்பலையானது தனது தரமான நிகழ்ச்சிகளால் ஏனைய வானொலிகளிடமிருந்து முன்னிக்கின்றது என்றால் மிகையல்ல. அதேபோல தனது நேயர்களின் இசைவாக்கத்திற்கு அமைவாக அவர்களின் விமர்சனங்களை உள்வாங்கி நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.

இருபத்துநான்கு மணிநேரமும் ஒலிபரப்பாகி வரும் சூரியன் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு இடையில் வெவ்வேறுப்பட்ட நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்களால் தொகுத்தளிக்கப்படுகின்றன. சூரியனின் வெற்றிக்கு தரமான நிகழ்ச்சிகளோடு அதன் அறிவிப்பாளர்களின் சுவாரஸ்யமான உரையாடல்களுமே காரணமாகும்.

அந்தவகையில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிமுதல் இரவு 8.45 மணிவரை என்றென்றும் புன்னகை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அனைவரையும் கவர்ந்திழுத்த இவ்நிகழ்ச்சியானது சூரியன் பண்பலையின் முகாமையாளர் நவநீதன் மற்றும் அறிவிப்பாளர் சஹானா ஆகியோரால் தொகுத்து வழங்கப்படுகிறது.


ஆரம்பத்தில் நேயர்களை கவர்ந்திழுத்த இந்நிகழ்ச்சி தற்பொழுது அரு (றுக்கும்) வருக்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. ஒரு அனுபவமுள்ள அறிவிப்பாளரின் நிகழ்ச்சி இவ்வாறு இருப்பது கவலைக்குரிய விடயமே.

காரணம் ஒரு நேயர் தொலைபேசியினூடாக அழைப்பினை மேற்கொள்ளும் போது, அவரை அழைப்பிலே காத்திருக்க செய்துவிட்டு அறிவிப்பாளர்கள் வாக்குவாதம் பிடித்துகொள்வதும், நேயரை கட்டாயபடுத்தி பாடவைப்பது மற்றும் விளம்பரங்களை பாடி கேட்பவர்களை அருவருக்க செய்து விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் நேயர்கள் அறிவிப்பாளர்கள் சொல்வதை செய்ய முடியாமல் திணருவதுமுண்டு. அவர்களை கட்டாயப்படுத்தி ஒரு விடயத்தை செய்ய வைப்பதென்பது முறையல்ல.

ஆரம்பத்தில் இசைசமர் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நேயர்களிடையே பிரபல்யப்பட்ட நவநீதன் இப்பொழுது இவ்வாறான நிகழ்ச்சிகளை வழங்குவது சூரியனின் தரத்தை குறைக்கக்கூடியதாகும். நேயர்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டியது அறிவிப்பாளர்களின் கடமை தான். என்றாலும் அதை பொருட்படுத்தவில்லை என்றால் நேயர்கள் ஏனைய வானொலிகளை கேட்க தொடங்கிவிடுவார்கள்.

எனவே இதை ஒரு விமர்சனமாக கொண்டு தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். இவ்வாறான விமர்சங்கள் அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியே தவிர குறையல்லவே. மேலும் பல மெருகூட்டல்களோடு தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கும் ஒரு நேயன்.....

Thursday, June 3, 2010

டில் ஸ்கூப் என்னாச்சி?

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பாணி இருக்கிறது. சச்சின் என்றால் அவருடைய துடுப்பாட்ட பாணி வேறு. சனத் என்றால் அது ஒரு வித்தியாசமான பாணி. இதற்கு தனியான ரசிகர் கூட்டம் காலத்துக்கு காலம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காலத்திட்கேட்ப கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வருவதை போல (உதாரணமாக: இருபதுக்கு இருபது கிரிக்கெட்) வீரர்களின் பாணியிலும் வித்தியாசமான, ரசிக்ககூடிய வகையிலான விளையாட்டு பாணிகள் புகுத்தப்படுகின்றது.


இவ்வாறான பாணிகளில் ஒரு சில ரசிகர்களாலும், வர்ணனையாளர்களாலும் ரசிக்கப்படுவதோடு, பெயர் சொல்லி அழைக்கப்படுவதும் வழக்கமானது. இது சில சமயம் கிரிக்கெட்டை ஆட்டி படைப்பதும் வழக்கமானதே.

பாகிஸ்தானிய சுழல் வீரர் சக்லைன் முஸ்தாக் அறிமுகபடுத்திய தூஸ்ரா பந்துவீச்சுப் பாணி கிரிக்கெட் உலகில் பல மாயாஜாலத்தை உண்டு பண்ணிக்கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. அவ்வாறான ஒன்றுதான் டில்ஷானால் அறிமுப்படுத்தப்பட்ட டில் ஸ்கூப் ஆகும்.

தனக்கு முன்னாள் எகிறி வரும் பந்தை சற்றும் எதிர்பாராத நேரம் லாவகமாக தன் தலைக்கு மேலாகவும் விக்கெட் காப்பாளருக்கு மேலாக பந்தை உயர்த்தி பின்னால் அடிப்பது தான் இந்த பாணியின் சிறப்பம்சம். இது சில சமயங்களில் ஆறு ஓட்டத்தையோ அல்லது நான்கு ஓட்டதையோ பெரும். இது கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டியில் நம்மவர் டில்ஷானால் அறிமுகபடுத்தப்பட்ட ஒரு பாணி. இது வர்ணனையாளர்களால் பெரிதும் பேசப்பட்ட ஒரு பாணி என்பதோடு டில்ஷானால் அறிமுகபடுத்தப்பட்டதால் இதற்கு டில் ஸ்கூப் என்ற நாமம் சூட்டப்பட்டது என்பதில் எமக்கும் பெருமையே.


ஆனால் அந்த பெருமையை தந்த டிஷானால் தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு தனது டில் ஸ்கூப் பாணியாலும் துடுப்பாட்டத்தாலும் மகிழ்ச்சியை தர முடியவில்லை. காரணம் இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே அவரது துடுப்பாட்டம் மிக மோசமானதாக காணப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ பி எல், இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டிகளில் அவரது பாணியை ஒரு போட்டியிலும் பயன்படுத்தவில்லை என்பதே ஆகும்.

சக்லைன் முஸ்தாக் அறிமுகபடுத்திய தூஸ்ராவால் அவருக்கு பெரிய முத்திரையை பதிக்க முடியவில்லை. மாறாக அது முரளியை இமாலயத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் மிகையல்ல. முரளியால் தான் தூஸ்ராவுக்கும் புகழ் கிடைத்தது என்றும் சொல்லலாம்.


இப்படியான நிலைமை டில் ஸ்கூப்பை அறிமுகபடுத்திய டில்ஷானுக்கும் வந்துவிடுமோ என்ற கவலை ரசிகர்களுக்கும் வந்துவிட்டது. அவர் அண்மைகாலமாக இதனை பாவிக்க மறந்து வரும் நிலையில் இருபதுக்கு இருபது உலககிண்ணத்தில் ஏனைய வீரர்கள் அப்பாணியை கையாண்டமை குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலாவது இவர் தனது பாணியை பயன்படுத்துவாரா என்று பார்க்கலாம். இலங்கை கிரிக்கெட் வீரர்களே உங்கள் பாணியும் பணியும் வளர வாழ்த்துக்கள்....

Tuesday, April 20, 2010

இளைஞர்-யுவதிகளின் நடத்தைப் பிறழ்வுகள்


இன்றைய காலக்கட்டத்தில் இது ஒரு முக்கியமான தலைப்பபாக இருக்குமென்று நான் கருதுகிறேன். இன்றைய நிலையில் இளைஞர் யுவதிகள் பல்வேறு நடத்தை பிறழ்வுகளுக்கு உள்ளாவது எல்லோரினதும் பெரும் கவலையாக இருக்கிறது. குறிப்பாக ஓரின சேர்க்கைகள், திருமனத்திற்கு முன்பு கருத்தரிப்பது, கொலை, தற்கொலைகள் இடம்பெறுவது என பல்வேறுபட்ட சமூக சீர்கேடுகள் இடம்பெறுகின்றன.

பெரும்பாலும் இவ்வாறான சீர்கேடுகளுக்கு தூண்டுகோலாக நவீன தொலைதொடர்பு சாதனங்களும், இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியுமே காரணிகளாக காணப்படுகின்றன. இதில் செல்லிட தொலைபேசிகளில் காணப்படும் SMS, MMS மற்றும் இணைய வசதிகளுமே முதலாவதாக சுட்டிக் காட்டக்கூடிய காரணிகளாக அமைகின்றன. இதை தூண்டும் வகையில் இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் தொழிற்பாடுகள் காணப்படுகின்றமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.

நவீன சமூக அமைப்பில் காதல் மற்றும் கவர்ச்சி என்பவற்றுக்கு வித்தியாசம் காணமுடியாமல் கவர்ச்சியே காதல் என இளைஞர்களும் யுவதிகளும் எண்ணுகின்றனர். இன்றைய சமூக சூழ்நிலைகள் ஆண்- பெண் அல்லது இளைஞர் யுவதிகளிடையே இலகுவான தொடர்பாடலுக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு, கலப்புப் பாடசாலைகள், ஆண்-பெண் கலப்பு வகுப்பறைகள், மாறி வரும் பெண்களின் உடையமைப்பு என்பன தன்னியல்பான சமூக சூழலை உருவாக்குகின்றன. அதுமட்டுமல்லாது  வீதி வீதியாக முளைத்திருக்கும் CD கடைகள் பாலின திரைப்படங்களை நுகர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துகின்றன.

இலங்கையில் தற்போது பாலுணர்வை தூண்டக்கூடிய அனைத்தும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. விளம்பரப் பாணியிலான புகைப்படங்கள், மாதிரி உருவங்கள், அழகு சாதனங்கள், Fashion Shows, நடன அரங்குகள், கடற்கரைகள் இவை இவ்விவகாரத்திற்கான தூண்டுதலை வழங்குகின்றன. இவற்றோடு எமது சமூக கலாசார விழுமியங்கள் மேலைத்தேய கலாசாரத்தின் பால் ஈர்க்கப்படுவதும் குறிப்பிட்டு சொல்லும் காரணியாக இருக்கிறது.

எமது சமூகத்திலிருந்து இவைகளை களைவது ஒரு சிக்கலான விடயம் தான். இருப்பினும் இவைகளை களைவது பெற்றோரிடமும் சமூகத்தோடு ஒன்றித்து இருக்கும் இலத்திரனியல் ஊடகங்களின் தொளிட்பாடுகளிலுமே தங்கி இருக்கிறது. முறையான வழிகாட்டலினால் இதனை இல்லாது செய்வோம். எமது கலாசார விழுமியங்களை பேணி பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையே. நல்வழி காட்டுவோம்...! நல்லதொரு சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்...!

Wednesday, December 23, 2009

ஊடலே காதலா??? வாழ்வை இனிமையாக்குவோம்


"காதல்" இது ஒன்றும் நாம் அறிந்திறாத புதிய தலைப்பொன்றல்ல. காரணம் இந்த காதல் என்பது எல்லோராலும் வாழ்த்தப்பட்டதும் அதற்கு நிகராக வசை பாடப்பட்டதுமாகும். சங்ககாலம் முதல் இன்றுவரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பழைய காதல் புது காதல் என கூறிக்கொண்டு காதலிப்பவர்கள் நம்மவர்கள். இருப்பினும் அந்த பழைய காதல் தான் இன்று நவீனமயபடுத்தப்பபட்டு எம்மவர்களுக்கு புதிய காதலாக தெரிகிறது. உதாரணமாக, அன்று கடிதத்தில் வந்தது இன்று SMS ல் ஓடுகிறது. காலத்துக்கு ஏற்றது போல வடிவம் மாறுகிறதே தவிர, பொருள் ஒன்றாகத்தான் இருக்கிறது.

அந்த கால காதலை விமர்சிப்பவர்கள் தான் தற்போதைய இளநரைகள். இக்காலத்திலும் உண்மை காதல் இருக்கிறது. ஆனால் அந்த கால வரலாற்றை பார்த்தால் இந்த கால காதல் தோல்விகள் உண்மை காதலின் விகிதத்தை குறைக்கிறது. இதற்கு காரணம், ஒரு சிலர் ஒரு ஒருவரை பார்த்து பிடித்தவுடன் காதல் கொள்கிறார்கள். பின்னர் காதலிக்க ஆரம்பித்தவுடன் சில நாள் ஓடும். அப்புறமென்ன ஒருவரை ஒருவர் தெரிய ஆரபித்தவுடன் மனம் பேதலித்துவிடுவார்கள். பின்னர் "அவ என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குற மச்சி" என்று காதலனும் "எல்லா ஆண்களும் இப்படிதண்டி" என்று பெண்களும் நண்பர்களுக்கு சொல்லிகொல்வார்கள். இதுவே இறுதியில் முற்றுப்புள்ளி வைத்துவிடும். எதையும் வேகமாக செய்யவே விரும்புவர்கள் இந்த காலத்து இளைஞர்கள். அந்த வேகமே இவர்களது காதலுக்கு தோல்வியை ஏற்படுத்தும் ஒன்றாகிறது. காரணம் வாழ்க்கையின் படிகளை ரசிக்க மறந்துவிடுவார்கள். உதரணமாக சொல்வதென்றால் 20 -20 ஆட்டத்தின் வருகைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளின் மவுசு பெருமளவில் குறைந்து வருகிறது. அதாவது போட்டியின் முடிவை எதிர்பார்ப்பவர்கள் ஆகிவிட்டனர் ரசிகர்கள். அதே போலத்தான் இந்த இக்கால காதலும் அவசர அவசரமாக முடிவை தேடி அழிவை தேடிக்கொள்கிறது. ஒரு பெண் அல்லது ஒரு ஆண் காதலிலே தோற்று இன்னொருவரை மணந்துவிட்டால்  எல்லாமே இல்லாமல் போய்விடும்.

இன்னொன்றை சொல்லியாக வேண்டும்.அதாவது திருமணத்தின் பின்பு இவ்வாறான பிரச்சினைகள் வருவதும் உண்டு. இதற்கு பெண்களின் நச்சரிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆண்கள் பேசும் ஒரு வார்த்தைக்கு பெண்கள் ஆயிரம் பேசுவார்கள். இது பொதுவாக ஆண்களுக்கு பிடிப்பதில்லை. நல்லவற்றை பேசுங்கள். இனிமையாக பேசுங்கள். காதல் இனிக்கும்.

வாழ்க்கையை ரசியுங்கள். அனுபவித்து வாழுங்கள். விட்டுகொடுத்து வாழுங்கள். உங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்தது போல வாழுங்கள். உங்கள் துணையை எப்பொழுதும் மகிழ்வியுங்கள்.

Monday, November 16, 2009

Latest Yahoo Messenger 10 for Free Download


Yahoo Messenger 10 Features: As Everyone knows Yahoo Messenger is a popular instant-messaging client and associated protocol provided by Yahoo!, that allows you to see when friends come online and to send them instant messages.

It also alerts you when you get new e-mail in your Yahoo Mail or in Yahoo Personals accounts, or when you have upcoming events recorded in your Yahoo Calendar. Yahoo Messenger supports firewall and a standby mode that minimizes the program until an Internet connection is made, the ability to save and print your conversations, and a tabbed interface that provides quick access to your favorite stocks, news, and sports scores.


Yahoo! Messenger is free of charge and can be download and used with a generic "Yahoo! ID" which also allows access to other Yahoo! services, such as Yahoo! Mail, Yahoo Site Explorer and many more.

Some Other fascinating features include the ability to create a chat room automatically, stock price alerts, the ability to send messages to friends (even if they're not online when you are), a Quick Compact mode that hides the Messenger tools to maximize your viewing area, Messenger Themes, and voice chat, which allows you to talk for free to anybody else on the Internet. It also includes doodle, themes, Launchcast Radio, Yahoo Games, and Yahoo Audibles. Using a Webcam, you can see who you're chatting with or view the Webcam of any Yahoo member who has granted you access.


So use this latest Yahoo Messenger 10 for Free Download Here.


Download Size:15.8MB

Click Free Download or Regular Download

Monday, October 26, 2009

Facebook, Twitter crooks just a click away

If you're on Facebook, Twitter or any other social networking site, you could be the next victim. Experts say cybercrooks are lurking just a mouse click away on popular social networking sites.

That's because more cyberthieves are targeting increasingly popular social networking sites that provide a gold mine of personal information, according to the FBI. Since 2006, nearly 3,200 account hijacking cases have been reported to the Internet Crime Complaint Center, a partnership between the FBI, the National White Collar Crime Center and the Bureau of Justice Assistance.

It starts with a friend updating his or her status or sending you a message with an innocent link or video. Maybe your friend is in distress abroad and needs some help.

All you have to do is click.

When the message or link is opened, social network users are lured to fake Web sites that trick them into divulging personal details and passwords. The process, known as a phishing attack or malware, can infiltrate users' accounts without their consent.

Once the account is compromised, the thieves can infiltrate the list of friends or contacts and repeat the attack on subsequent victims. Social networking sites show there is ample opportunity to find more victims; the average Facebook user has 120 friends on the site.
"Security is a constant arms race," said Simon Axten, an associate for privacy and public policy at Facebook. "Malicious actors are constantly attacking the site, and what you see is actually a very small percentage of what's attempted."

Social Media Crimes
As some social networking sites experience monstrous growth, they are becoming a new -- and extremely lucrative -- frontier for cybercrime. Facebook says it has 300 million users, nearly the size of the U.S. population, and it continues to attract users outside the college student niche. From February 2008 to February 2009, Twitter, a micro-blogging site where users post 140-character messages known as tweets, grew 1,382 percent to more than 7 million users.

"They [cybercriminals] are very adept to using social engineering," said Donald DeBold, director of threat research for CA, an Internet security company. "Your friend is in trouble traveling in another country, 'I lost my wallet. I need help.' They exploit the curiosity aspect out of human nature."

A few decades ago, malicious software and viruses were usually the result of a prank, but Internet security experts say today's attacks are profit-driven. A study from the Indiana University in 2005 discovered that phishing attacks on social networks operated with a 70 percent success rate. These users had fallen for the scam, opened the foreign link and released personal information.

Cybercriminals are employing phishing and malware attacks for a number of reasons, including trying to redirect users to sites where profit is fueled by the number of visitors. They also try to elicit private information like passwords and bank account numbers to perform scams.

Early this year,Twitter experienced several phishing attacks in which a Web page that looked identical to the widely recognized light blue Twitter page was a hoax. The company warned users to double-check the URL to ensure they were visiting the correct site.

The Internet Crime Complaint Center received more than 72,000 complaints about Internet fraud in 2008 that were referred to law enforcement agencies for further investigation. These cases involved financial losses amounting to $264.6 million, an increase from 2007. Each person lost an average of $931.

"Most of us would want to help a friend in need, but if it's an online friend, and they want you to wire money, you should double-check," FBI spokesman Jason Pack said.
Security experts said it makes sense that cybercriminals are turning to social networking sites. Personal information is abundant on sites like Facebook and MySpace. Each time users give out valuable information like birth dates or addresses, they could be providing hints about their password, security experts say.

The American Civil Liberties Union has expressed concern about the information visible through Facebook quizzes and applications. "They'll have access to all that information, so they can sell it, they can share it, they can do an awful lot with it," Chris Calabrese, legislative counsel for privacy-related issues with the ACLU, told CNN.com in September.
Many Internet security experts consider the first virus attack on the PC to have occurred in 1986. By the early 1990s, viruses transmitted on floppy disks became ubiquitous. When the World Wide Web became widely available that same decade, viruses, worms and malware became problems in e-mail accounts, frustrating users who clicked on messages thought to be legitimate.

In the new millennium, the most common form of malware attack has become known as drive-by downloads. While surfing on Google or Yahoo, spyware or a computer virus is automatically and invisibly downloaded on a computer, requiring no user interaction for the computer to be infected.

"We are on the verge from shifting from the Web being the No. 1 victim of infecting to social network," said Mikko H. Hypponen, chief of research technology at F-Secure Corp. His company sells anti-virus software and malware protection programs. "It's going to get a lot worse before it gets better."

Social networks are fighting the aggressive attacks from cybercriminals. Most sites have information pages dedicated to educating users about the risks of Internet scams. Users can become a fan of "Facebook Security" and receive updates on how to protect their accounts. One of the most common pieces of advice given by security experts is to change passwords frequently.

Facebook has also developed complex automated systems that detect compromised accounts. They spot and freeze accounts that are sending an unusually high number of messages to their friends. Company security officials said Facebook is a closed system, which can be helpful in erasing phony messages from all accounts.

At News Corporation's MySpace.com, the company creates blacklists of phony accounts to prevent people from clicking on a faulty link. Hemanshu Nigam, first chief security officer for MySpace, said the firm warns about suspicious links and educates users about the harm phishing and malware attacks can bring. "We are prepared for them," he said.

Tuesday, October 20, 2009

காதலுக்காக அலைஞ்சது போதும் - ஒன்னு போன இன்னொன்னு இருக்குங்க



அண்மையில் இணையத்தில் உலாவிய போது  என்னால் வெப்துனியா எனும் இணையதளத்தில் ஒரு கட்டுரை வாசிக்க முடிந்தது. அதாவது காதலுக்காக மிரட்டுவது தவறு எனும் தலைப்பிட்டு அந்த கட்டுரை தீட்டப்பட்டிருந்தது. அந்த கட்டுரையை நீங்களும் ஒருமுறை வாசிப்பதற்காக அப்படியே உங்களுக்கு தருகின்றேன். முதலில் வாசியுங்கள். பின்னர் தொடரலாம்.


"ஒருவரை காதலிக்கிறோம் என்று அவரிடம் கூற மட்டுமே ஒருவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அவரையும் காதலிக்க வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை.

சிலர், தான் விரும்பும் காதலரோ, காதலியோ தங்களது காதலை மறுக்கும் போது அவர்களை உணர்ச்சிப் பூர்வமாக மிரட்டத் துவங்கிவிடுவார்கள்.

அதாவது, நீ என்னைக் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன், சாப்பிட மாட்டேன், கைகளைக் கீறிக் கொள்வேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை வேண்டாம், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று கெஞ்சுவதை விட, தற்கொலை என்பது முட்டாள்களின் முடிவு. அதை நீங்கள் தேர்வு செய்தால் ஒரு முட்டாளை நாம் காதலிக்காமல் போனதே நல்லது என்றுதான் நான் நினைப்பேன்.

நீங்கள் சொன்ன எதைச் செய்தாலும் உங்களை அறுவருப்புடன்தான் நான் பார்ப்பேனேத் தவிர கொஞ்சம் கூட பரிதாபப்பட மாட்டேன் என்று தெளிவாக உறுதியாகச் சொல்லுங்கள்.

இதுபோல் மிரட்டல் விடுபவர்கள் நிச்சயமாக எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒரு கோழைகள் இவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் தள்ளி இருங்கள்.

மேலும் சிலர், உன்னைக் கொன்று விடுவேன், ஆசிட் வீசி விடுவேன் என்று கூட மிரட்டுவார்கள். அவர்களிடம் சிறிது எச்சரிக்கைத் தேவை.

ஆனால் பயத்தை அவர்களிடம் காட்டக் கூடாது. நீ இப்படி எல்லாம் பேசுவாய் என்று தெரிந்து தான் உன்னைப் பற்றி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளேன். எனக்கு என்னப் பிரச்சினை என்றாலும் உன் நிலைமை அதோ கதிதான். என் நெருங்கிய உறவினர்களுக்கும் உன் முழு விவரத்தை அளித்துள்ளேன். இனி அவர்கள் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று பதில் மிரட்டலை விடுத்துவிட்டு அவரிடம் இருந்து கழன்று கொள்ளுங்கள்.

பெரும்பாலான பிரச்சினைகள் இதைத் தாண்டி வராது. பொதுவாக எல்லாக் காதலர்களும் இது போன்று இருப்பதில்லை. உங்கள் முகம் சுழித்தாலே அவர்களே விலகி விடுவதுதான் இயற்கை. ஒரு சிலர்தான கடைசி வரை சுற்றி உயிரை எடுப்பார்கள்.

இதுதான் கதை. இந்த கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு எண்ண தோணுகின்றது? இன்று எம்மவர் மத்தியிலே (இலங்கையிலே) காதலுக்காக அலைபவர்கள் மிக அரிது எனலாம். அதாவது காதலிக்கச் சொல்லி பின்னால் அலைந்த காலம் போய், வசூல்ராஜா MBBS  என்ற திரைப்படத்தில் வரும் பாடல வரியான, ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி என்பதை போல செல்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமே. 

என்னடா நம்ம நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கப்போ இவன் (உருப்படாதவன்) இத சொல்லுறான்னு நீங்க யோசிக்கலாம். காலம் அப்படி கெட்டு கிடக்குதுங்க. அதோட சேர்ந்து நாமளும் கெட்டு போனாதானே பெரியவங்க சொன்னதுலயும் ஒரு அர்த்தம் இருக்கும்? அதான் ஊரோடு ஒத்து வாழ் என்று சொல்லிருக்காங்களே! காலத்துக்கு ஏற்ப மனிதர்களும் மாறுவது காலத்தின் கட்டாயமே. எனவே இனியும் நாம் பொண்ணுங்க பின்னாடி சுத்துறத விட்டுட்டு, ஒன்னு போன இன்னொன்னு இருக்கு எண்டு வாழ்கையை சந்தோசமாக்கிக்க பழகிக்குவோமே. 

Environmental Online Communication


Environmental Online Communication is an effective survey of the 'state of the art' in online communications from a distinctly environmental perspective. It addresses technical, social and policy issues that challenge practitioners of environmental education and communication. It is an interdisciplinary investigation of fundamental concerns from both theoretical and practical perspectives. In a day and age when economics dictate that the environmental community must accomplish more with less in order to merely maintain the status quo, this book is filled with strategies for success. Topics covered by the book include:
  • Raising Environmental Awareness

    • Improved public access to environmental information and data
    • More effective advocacy through enhancement of online fund raising, promotion, and systems usability
    • Sustainable approaches to online education, distance learning and collaboration

  • Environmental Science

    • Structuring data for reuse and technologies related to sharing that data across the internet
    • Referencing information geographically using data, meta data, and maps
    • Innovative uses of distributed computing resources

  • Corporate Sustainability

    • Maintenance and reuse of information systems
    • Sharing data in industry standard formats to reach the broadest audiences, for maximum impact and return on investment

  • Networks and Virtual Communities

    • Creating systems that encourage social networking and use its benefits to enhance the discourse between environmental communicators
    • Using the patterns and use of internet information systems to better manage information, knowledge, projects and people


This book should age relatively gracefully and provide a source of useful references for the practitioner for at least five years. While the particular technical issues addressed within the research articles will likely be overcome as technology advances, the methodologies and designs may have a longer shelf life. Regardless, the book offers an excellent overview of the problems and potential solutions in contemporary environmental communication.


If anything, the title of the book may somewhat undersell its content. This is not just another summary of the technology 'flavor of the day' or a dummy's guide to building pretty Web sites for online communication. For the most part, the academic rigor with which the material is presented and the research methods employed by the authors should satisfy even a hardened skeptic that the authors are speaking from a foundation of knowledge and not merely opinion. From this rigor, the practitioner can take examples of how metrics are used to measure success and scientific research is used to guide action and inform policy. The topics addressed cut a wide path across the landscape of problems confronting the environmental community, they are as real as the solutions explored.


For the environmental educator and communicator, with a modest technical background, this book will not be an easy read but it will be rewarding. There is technical depth in the treatment of most subjects but not excessively so. A reader without deep understanding of the subject matter can approach the material from a more general systems perspective and take away plenty of useful insights.

Wednesday, August 26, 2009

வேகமாக இடம் பெறும் சர்ச் என்ஜின் பிங் [Bing]

மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்கு எதிராகத் தயாரித்து அண்மையில் வெளியிட்ட தன்னுடைய பிங் (BING) சர்ச் இஞ்சின் உலகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரும் முதல் 20 இணைய தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது. அறிமுகமாகி இரண்டு மாதங்களில் இந்த இமாலய வளர்ச்சியை இந்த சர்ச் இஞ்சின் பிடித்தது அனைவரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் புதுக் கண்ணோட்டத்துடன் பார்க்க வைத்துள்ளது.

இணைய தளங்களையும் அவற்றை வந்து பார்த்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கண்காணித்து வரும் புகழ் பெற்ற அலெக்ஸா அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிங் சர்ச் இஞ்சினுடைய முன்னோடியான விண்டோஸ் லைவ் சர்ச் இன்னும் ஐந்தாவது இடத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தளத்திற்கு வரும் தேடல்களெல்லாம் முழுமையாக பிங் தளத்திற்கு திருப்பிவிடப்பட இருக்கின்றன.
முதல் 20 இடத்திற்குள் பிங் வந்துவிட்ட தனாலேயே கூகுள் கலக்கமடையுமா? கூகுள் சர்ச் இஞ்சின் இன்னும் முதல் இடத்திலேயே அதிக பலத்துடன் அமர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஹூவும் அதனை அடுத்து கூகுளின் இன்னொரு சொத்தான யுட்யூப் அமர்ந்துள்ளன. இருப்பினும் இரண்டு மாதத்தில் பிங் பெற்றுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதுதான்.


ஆனால் கூகுளை அசைக்க இன்னும் அது அசாத்திய வளர்ச்சியைப் பெற வேண்டும். தான் தரும் வசதிகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மொத்தப் பயன்பாட்டில் கூகுள் இன்னும் பலரும் தொட முடியாத உயரத்தில் உள்ளது.

Thursday, August 13, 2009

International Youth Day


History of International Youth Day:

International Youth Day is the best time to commemorate the power and strength of the youthall around the globe. International Youth Day is celebrating every year on 12th August since 1999. United Nations defined an event for highlighted awareness on the requirements of young people in the middle of 10 to 24 years. On the other hand, the youth send some affectionate mails to extend this day with their darling, friends, esteemed ones on this day.

The aim of International Youth Day:

The aim of International Youth Day is to endorse consciousness, particularly among youth. The World Programme of Action for Youth is started before 2000. The World Programme of Action wants to achievement in 10 main fields.

The 10 fields are starvation, poverty, education, employment, health, drug exploitation, childhood felony, recreation events, Child and young women, Environment. The International Youth Day suggests that regional, countrywide and worldwide implements the Programme.

The activities of International Youth Day:

The United Nations marked out the youth, the age between 15 to 24 years. This is one sixth of the global populace. The youth will develop the countries to increase preciously in 21st century in all sides.

Many activities and events that take place around the world on International Youth Dayyoung people bring into the world. Many countries participate in this global event, which may include youth conferences on issues such as education and employment. Other activities include concerts promoting the world’s youth, as well as various sporting events, parades and mobile exhibitions that showcase young people’s achievements. promote the benefits that

The ideas of International Youth Day:

The Vienna and Austria youth established World Youth Form. The Form was proposed the idea for International Youth Day in 1991. The World Youth Forum recommended that to be declared an International Youth Day for fund-raising and promotional purposes. The Form supports the ‘United Nations Youth Fund’ in affiliation with youth associations.

In 12th August 1998, The Government of Portugal, acknowledged that as the World Conference of Ministers Responsible for Youth was adopted International Youth Day, collaboration with the United Nations. This is the 54th symposium of the General Assembly. In 17the Dec 1999, The Government gives the right "Policies and programmes involving youth".

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits